ஆசையிலே பாத்தி கட்டி - Aasaiyile Paathi Katti Lyrics

தென்பாண்டி சீம தெம்மாங்கு பாட்டு
பாட்டோட வாழும் என் சாமியே
ஒன் பேர போட்டு
நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் ஒன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானய்யா
என் வாக்கு நீ கேட்டு
காப்பாத்தய்யா

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி


வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்னப் பூ பாத்து
சேர்ந்ததே காத்து
சிந்து தான் பாடுது

பொன்னு மணித்தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி  என்னத்தேடி
நீ அங்க வந்து சேரு
வெதை போட்டேன் அது வெளஞ்சாச்சு
நீ வா என் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி


கண்ணு தான் தூங்கவில்ல
காரணம் தோணவில்ல
பொன்னு நான் ஜாதி முல்ல
பூமால ஆகவில்ல
கன்னி தான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்து தான் கூடவில்ல

கூரப்பட்டுச் சேல
நீ வாங்கி வரும் வேள
போடு ஒரு மால
நீ சொல்லு அந்த நாள
ஏன் சாமி நான் காத்திருக்கேன்
என்ன ஏந்து நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி

கருத்த மச்சான் கஞ்சத்தனம் - Karutha Machan Kanjathanam Lyrics

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பூட்டிவச்ச குதிரை ஒன்னு
புட்டுக்கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கிவைக்க
கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ள
மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு
பூட்டத் தொற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு
பந்தக்காலும் நீ போடு
ஒன் மார்பில் சாயாம
தூங்காது கண்ணு
என்னத்தான் புடிச்சு
மெல்லத்தான் அணைச்சு
முத்தந்தான் நித்தந்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்


முளைச்சு இங்கு மூணு இலை
விட்டவளும் நானே
என்ன கருகவச்சு பாக்குறியே
காஞ்ச நிலம் போல
நேத்து இங்கு சமஞ்சதெல்லாம்
புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா
சுட்ட சட்டி போல

எப்போதும் ஒன் நேசம்
மாறாது என் பாசம்
என் சேல மாராப்பு
நீதானே ராசா
என்னத்தான் புடிச்சு
மெல்லத்தான் அணைச்சு
முத்தந்தான் நித்தந்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்

தல கோதும் எளங்காத்து - Thalakothum Elangaathu Lyrics

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

ம் ம் ம் ம்.......

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ம் ம் ம் ம்.......

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 
கைசேரு.....


நீல வண்ணக் கூர இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகள மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோழில் நம்மை ஏந்திக் கொள்ளும்
நமக்கான நாள் வரும்

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு