ஆறா மழை உனக்குத் தான்
நீங்கா நிழல் உனக்குத் தான்
நீ கண்மணி எனக்குத் தானே
பொருந்திப் போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விருது தேரே வா
சந்திக்கா மலர் உனக்குத் தான்
கண்டிக்கா மொழி உனக்குத் தான்
சிந்திக்கா நொடி உனக்குத் தான்
சிரிக்கும் நதி உனக்குத் தானே
வழியும் எச்சில் வாயோரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் காலக் கண்ணாடி
உன் ஆசை என்னாடி
நான் நடத்தி வைப்பேன்
வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில்
வா அழகுத் தேனே வா
பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பாத்து பாத்து
ஆயுள் கூடும் எனக்கு
புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாறிப்போச்சு கணக்கு
என் கூட பேசுற தூத்தோவா உனக்கு
நேருல காட்டட்டுவா
சில்லுக்கு புடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா
அந்த அருவிப் போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
நீ தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூறாக
என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விருது தேரே வா