காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே
காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே
கோடைக் காலத்தில் தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டுப் பாட
மழைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட.. கூட..
பூவில் மேடை அமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாணப் பரபரப்பு
காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே
எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன் என்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது பாவம்.. தாபம்..
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம்.. யோகம்..
வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மமெடுப்பேன்
காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே
No comments:
Post a Comment