ஆ... அடிக்குது குளிரு... துடிக்குது தளிரு
முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது
கொம்பைப் போல உன் அன்பைத் தேடுது
வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக் கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு... ஆ... அது சரி அது சரி
துடிக்குது தளிரு.. இத பாரு டா
முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது
அப்டியா..
கொம்பைப் போல உன் அன்பைத் தேடுது
ஓஹோ...
வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா.. எப்டி எப்டி
கிட்ட வந்து நேரா
கட்டிக் கொள்ளு ஜோரா
அள்ளிச் சேர்க்க ஆசை இல்லையோ
ஆடி ரதம் அழைக்குது.. ஆய்
கிள்ளிப் பார்க்க எண்ணம் இல்லையோ
ஆலிலை தவிக்குது... ஓஹோ
முத்தம் நூறு கேட்டு வாங்கவே
நாணம் எனை தடுக்குது.. அட்ரா சக்க
பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடைத் துடிக்குது... இதெப்டி இருக்கு
சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்.. ஆம்அ..
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கம் இன்றி கூடலாம்.. அப்டி போடு
உன்னைப் பார்த்து நான்
சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டிக் கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு... ஆ... அது சரி அது சரி
துடிக்குது தளிரு.. அது ரொம்ப சரி ரொம்ப சரி
சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னைப் போல நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்
என்னை நீயும் ஏற்றுக் கொண்டது
பாவை என் பாக்கியம்
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
இல்லையா பின்ன..
மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
போச்சுடா...
உன்னைப் பார்த்து நான்
சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டிக் கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு... ஆ...
என்ன மடக்குது தளிரு.. ஆஆஆ...
முல்லைப் பூங்கொடி... ம்...
கொம்பைத் தேடுது.. ஆ..
கொம்பைப் போல என்..
அன்பைத் தேடுது.. வாரே வாரே வா..
கட்டித் தங்க மேனி
கட்டழகு ராணி..
கொட்டிப் பார்த்த தேனி
கட்டில் பக்கம் வா நீ..
அடிக்குது குளிரு...
No comments:
Post a Comment