ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா
சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே
நடப்பது என்னன்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே
நடந்தது என்னன்னு
கோயில் மணிய யாரு அடிக்கிறா
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
என்றும் ஒளிரணும்
ஒளியிலே தெரிவது நீயில்லையா
நீயில்லையா நீயில்லையா
புத்தம்புதியதோர் பொன்னு சிலையொன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவப்போல ஓர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியத படிச்சாலும் எதுவும் புரியல
ஒளியிலே தெரிவது நீயில்லையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா
No comments:
Post a Comment