தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாருமில்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சு போச்சி நெஞ்சுக்குள்ள
நாக்குல மூக்கைய ஏஹே
தொட்டவன் நானடி
பார்வையால் உசுரயே ஓஹோ
தொட்டவ நீயடி
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாருமில்ல
ஐயாரெட்டு நெல்லப்போல
அவசரமா சமஞ்ச
அயித்தமக பஞ்சத்துக்கு
ஆதாரமா அமஞ்ச
குட்டிப் போட்ட பூனை போல
காலச் சுத்தி கொலஞ்ச
பாவமின்னு நீவி விட்டா
பல்லு போட துணிஞ்ச
சொந்தக்காரன் நான் தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
கன்னம் தொடும் கை ரெண்டும்
கீழே கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டாமை தான்
இன்னும் உள்ளதா
வயசுக்கு வந்த பூ ஓஹோ
ஆசைய பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஓஹோ
சண்டையா சத்தமா
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல
கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத் தண்ணி வத்தும்போது
திரும்பிருவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித் தாறேன்
நீயும் கொஞ்சம் வாம்மா
அங்கே இங்கே கையி படும்
சொல்லிப் புட்டேன் ஆமா
நிலாக் கறைய அழிச்சாலும்
ஒன்ன திருத்த முடியாது
பொரட்டி போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது
போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது
கிள்ளவா அள்ளவா ஓஹோ
சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஓஹோ
பட்டிமன்றம் வைக்கலாம்
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாருமில்ல
No comments:
Post a Comment