வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு
ஏனடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு
ஏனடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று
காணோமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று
காணோமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள்
ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறிவிட்டாள்
ஏனடா கண்ணா
காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா
அந்த காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா
அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்
ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன்
தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால்
முடியுமா கண்ணா
தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா
அதை நீ பிறந்த பின்பு கூற
இயலுமா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள் தான்
கூறடா கண்ணா
No comments:
Post a Comment