நன்றி சொல்லவே எனக்கு என் மன்னவா - Nandri sollave unaku en mannavaa lyrics

நன்றி சொல்லவே உனக்கு  என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் புயல் உனை வாட்டிய போது
சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ் பிறப்பும் உயிர் துணை உனை நான் பிரியேனே
திசை அறியாது நானே
இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமெனும் வீடு தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விழைந்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு - Unnai thotta thendral ondru ennai thottu lyrics

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி



தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பேரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும் போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி



உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே 
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்லவில்லையே
நீ என் பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு ம்ஹூம்..
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன ம்ஹூம்..

மேற்குச் சீமையிலே வேகாட்டுக் கோவிலிலே - Merku seemayile mekattu kovilile lyrics

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா

சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
பம்ப சத்தம் கொட்டுச் சத்தம் கேட்கலயா சொல்லு தாயி
வெட்டருவா வேலுக்கம்பு சூலாயுதம் ஏந்தி வாடி



எட்டு தெச கட்டி ஆண்டு வந்தானே
எத்தனையோ கஷ்டம் தீர்த்து வச்சானே தாயே
அம்மா....
ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வச்சானே
சனமெல்லாம் பெருசுன்னு ஆசப் பட்டானே தாயே
அம்மா....
மகமாயி தாயே மனம் மாறணும்
மகராசி கோட்டையில் குடியேறணும்
கருமாரி தாயே நீ கண் பார்க்கணும்
காயங்கள் மாறித் தான் மண் ஆளணும்
குங்குமக்காரியே பொறுப்பேற்கும் தேவியே
உன் பிள்ளை வாடுதம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே



காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா
கழுத்தில் மாலை விழ நெனச்சது தப்பா தாயே
அம்மா....
கல்யாணம் தான் மாறி போனது தப்பா
காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே
அம்மா....
சூறாவளி காத்து சுத்தி வந்து
சொந்தம் எல்லாம் மாறி போனதம்மா
காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு
நேர்த்திக் கடன் செய்ய வந்தேனம்மா
பூவுக்கும் பொட்டுக்கும் ஆசப்பட்டு வந்தேன்
வேறென்ன கேட்டேனம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே