நன்றி சொல்லவே எனக்கு என் மன்னவா - Nandri sollave unaku en mannavaa lyrics

நன்றி சொல்லவே உனக்கு  என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் புயல் உனை வாட்டிய போது
சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ் பிறப்பும் உயிர் துணை உனை நான் பிரியேனே
திசை அறியாது நானே
இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமெனும் வீடு தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விழைந்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

No comments:

Post a Comment