கதை ஒன்னு நடக்குதம்மா
காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே
மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
பம்ப சத்தம் கொட்டுச் சத்தம் கேட்கலயா சொல்லு தாயி
வெட்டருவா வேலுக்கம்பு சூலாயுதம் ஏந்தி வாடி
எட்டு தெச கட்டி ஆண்டு வந்தானே
எத்தனையோ கஷ்டம் தீர்த்து வச்சானே தாயே
அம்மா....
ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வச்சானே
சனமெல்லாம் பெருசுன்னு ஆசப் பட்டானே தாயே
அம்மா....
மகமாயி தாயே மனம் மாறணும்
மகராசி கோட்டையில் குடியேறணும்
கருமாரி தாயே நீ கண் பார்க்கணும்
காயங்கள் மாறித் தான் மண் ஆளணும்
குங்குமக்காரியே பொறுப்பேற்கும் தேவியே
உன் பிள்ளை வாடுதம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே
காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா
கழுத்தில் மாலை விழ நெனச்சது தப்பா தாயே
அம்மா....
கல்யாணம் தான் மாறி போனது தப்பா
காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே
அம்மா....
சூறாவளி காத்து சுத்தி வந்து
சொந்தம் எல்லாம் மாறி போனதம்மா
காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு
நேர்த்திக் கடன் செய்ய வந்தேனம்மா
பூவுக்கும் பொட்டுக்கும் ஆசப்பட்டு வந்தேன்
வேறென்ன கேட்டேனம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே
மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே
No comments:
Post a Comment