கோகுல பாலா கோடி பிரகாசா
விரக நரக ஶ்ரீரக்சக மாலா
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடியவா
களவாடிய சிந்தை திரும்பத் தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா வா..
உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா....
உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகம் அல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேர் இல்லையே
நளின மோக சாமன ரங்கா
தீம் தீம்கிட தின்னா
நடன பாவ சுதிலய கங்கா
தீம் தீம்கிட தின்னா
சரிவர தூங்காது வாடும்
மனம் தினம் உனக்காக ஏங்கும்
ராதா தான் உனக்கென ராதா தான்
உனக்கொரு ராதா தான்
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஓ... பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு
பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி
உடலணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா..
தூங்காத என் கண்ணின்
துயிலுரித்த கண்ணன் தான் இனி நீ
இனி நீ
இது நேராமலே நான்
உனை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா