எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே - Ellorum sollum paatu solvene

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து



நாயகன் மேலிருந்து 
நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று 
நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்னேகமாய் புயலடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து



கோவலன் காதை தன்னில்
மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால்
கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

No comments:

Post a Comment