கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன - Koondukkulla onna vachu koodi ninna lyrics

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே



கண்ணு வலது கண்ணு
தானே துடிச்சதுன்னா ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கத முடிஞ்சு போச்சு
ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம்
மாமன் பேர சொல்லிப் பேசுது
ஆறாத சோகந்தன்ன தீராம சேர்த்து வச்சு
ஊரும் சேர்ந்து என்ன ஏசுது
மாமா மாமா ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள ஒன்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே



தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்ன தினம் பாடும்
கஞ்சி மடிப்பும் கறை வேட்டி துணியும்
இந்த மாமன் கதைய தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டி போகல
பண்ணாரி கோயிலுக்கு முந்தான ஓரத்தில
நேர்ந்து முடிச்சு வச்ச கடன் தீரல
மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள ஒன்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
என் மாமா மாமா ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

No comments:

Post a Comment