ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை - Aaraaro Paatu Paada Naanum Thaayillai Lyrics

ஆராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை



மார்பிலே போட்டு நான்
பாட வழி தான் இல்லையே
மடியிலே போட்டு தான்
பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே
வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே
நம்பக் கூடாது
மேலாடை பார்த்து தான்
நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே
ஆசை வேர் விடுதே

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை



தோளிலே நாளெல்லாம்
சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம்
மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே.. ம்...
இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே.. ம்ஹூம்..
என்றும் மாறாது
நீ என்றும் தேன் என்றும்
பேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும்
காதல் பூ மழையே

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை

1 comment: