சீர்மேவும் குருபதம் சிந்தையொடு - Seermevum gurupatham sinthaiyodu Lyrics

NSK:
சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்து போற்றி
ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாமன் நானே...

சங்கத்துப்புலவர் பலர் தங்கத்தோட பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்து முன்னே ஓடி பங்கப்பட்ட பாராதீரர் சீரெடுத்துப் பாடிவாரேன் நேரே
அதற்கு ஓரெழுத்துப் பதில் சொல்லிப்பாரேன்....

MGR:
யானையைப் பிடித்து.....
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா
வீட்டுப் பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்து தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

NSK:
அ.... அப்பறம்... ஓஹோ.. சரிதான்...

பூதானம் கன்னிகா தானம் சொர்ண தானம் அன்ன தானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்

ஹேய்... கேள்விக்குப்பதில கொண்டா டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா
ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவென் முண்டா அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா....
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி....

பதில்ல்ல்....  

MGR:
சொல்றேன்...

எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான் நிதானந்தான்....
எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்... நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...


NSK:
சொல்லிட்டான்.. இரு...

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?... இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி 

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?

MGR:
சிற்ப வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே...

NSK:
போச்சுடா... சரிதான்...

MGR:
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

NSK:
அன்ன சத்திரம்........ என்ன சொன்ன?
 
MGR:
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

NSK:
பல திண்ணைதூங்கிப் பதங்கள் இருப்பதாலே? எப்டி...

MGR:
பரதேசியாய் திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ...

பரதேசியாய் திரிவதெதனாலே..?

NSK:
அவன் பத்து வீட்டு... ஆ... ஆ.. சரி இதுவேணாம்...

அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி.. காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

MGR:
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே....

NSK: சே... MGR: அண்ணே..

MGR:
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

NSK:
சொல்லிப்புட்டியே...

MGR:
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

NSK:
புகையும் நெருப்பில்லாம அது எப்டி எரியும்?

MGR:
நான் சொல்லட்டுமா?

NSK:
சொல்லு..

MGR:
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது? பசித்து வாடும் மக்கள் வயிறு அது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

NSK:
சரிதான் சரிதான் சரிதான்

MGR:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

NSK: கத்தி.. MGR: இல்ல
NSK: கோடாலி... MGR: இல்ல
NSK: ஈட்டி... MGR: ம்ஹூம்
NSK: ஆ...கடப்பாற... MGR: இல்ல

NSK:
அதுவுமில்லயா... அப்பறம்.. பயங்கரமான ஆயுதம் அக்னியா இருக்குமோ.. அது ஆயுதமில்லயே.... புரியமாட்டேங்குதே.. அட நீயே சொல்லப்பா..

MGR:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது..

NSK:
ஆஹா ஹாஹா....

MGR:
நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது..

அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி - Azhaithal varuvaale sriranjani Lyrics

அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
ஆனந்தராகம் அவளின் த்வனி
இதயம் திளைத்து இசை குழைத்து
அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி

ஆ.. ஆ.. ஆ.. ஆ...
சச ரிச கச மச
தசநிதமக ரிமகரி சச சச சச சசச


கீரவாணியுடனே சாரமதியும் மோகனமும் அறிவேன்
எனக்குள்ள ராகம் ஸ்ரீரஞ்சனி
கண்கள் தூங்கும்பொழுதும் நினைவு தவறி கனவு வரும்பொழுதும்
உதடுகள் பாடும் ஸ்ரீரஞ்சனி
நினைவை மூட பிறைகள் இல்லை நிலவை மூட கனவு இல்லை
ஸ்வரம் எனும் அருள் பெறவா....
வா... என்றழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி

மமமமமமமமமமமமமம.....
மகரிசரி மாகரிசரி நிதமகரிசரி கமதநிசகரி
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரி....
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிகா...
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிரா....

நிறுத்துங்க என்ன ராகம் பாட்றீங்க?

ஏன் ஸ்ரீரஞ்சனி தான்

ஸ்ரீரஞ்சனியா இது? ஸ்வரத்துக்கெல்லாம் ஜொரம் வந்து அழப்போகுது..

இப்ப பாரு....

மமமமமமமமமமமமமம.....
மகரிசரி மாகரிசரி நிதமகரிசரி கமதநிசகரி
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரி....
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிகா...

தவறல்லவா? அட நீங்கள் பாடியது சிவரஞ்சனி...
பஞ்ஜமம் இல்லாதது உங்கள் நெஞ்சுக்குள் நில்லாதது
ப.... கெடயாது... ப.... எப்டி வரும்... ப... இல்ல
சரிகபதநிச சநிதமகரிச.. இதுவல்லவோ ஸ்ரீரஞ்சனி...

எனக்கா தெரியாது ஸ்ரீரஞ்சனி... கொஞ்சம் கலப்படம் செய்தேன் சிவரஞ்சனி
கோபம் தீர இந்த குழப்பம் உதவியது புத்தி தெளிய இந்த உக்தி உதவியது
கள்ளச்சாவி போட்ட போது கதவு திறந்து நிலவு நடந்து வெளிவந்தது...
எனக்கா தெரியாது ஸ்ரீரஞ்சனி....

நன்றி: வைரமுத்து