நன்றி சொல்லவே எனக்கு என் மன்னவா - Nandri sollave unaku en mannavaa lyrics

நன்றி சொல்லவே உனக்கு  என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் புயல் உனை வாட்டிய போது
சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ் பிறப்பும் உயிர் துணை உனை நான் பிரியேனே
திசை அறியாது நானே
இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமெனும் வீடு தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விழைந்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு - Unnai thotta thendral ondru ennai thottu lyrics

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி



தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பேரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும் போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி



உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே 
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்லவில்லையே
நீ என் பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு ம்ஹூம்..
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன ம்ஹூம்..

மேற்குச் சீமையிலே வேகாட்டுக் கோவிலிலே - Merku seemayile mekattu kovilile lyrics

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா

சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
பம்ப சத்தம் கொட்டுச் சத்தம் கேட்கலயா சொல்லு தாயி
வெட்டருவா வேலுக்கம்பு சூலாயுதம் ஏந்தி வாடி



எட்டு தெச கட்டி ஆண்டு வந்தானே
எத்தனையோ கஷ்டம் தீர்த்து வச்சானே தாயே
அம்மா....
ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வச்சானே
சனமெல்லாம் பெருசுன்னு ஆசப் பட்டானே தாயே
அம்மா....
மகமாயி தாயே மனம் மாறணும்
மகராசி கோட்டையில் குடியேறணும்
கருமாரி தாயே நீ கண் பார்க்கணும்
காயங்கள் மாறித் தான் மண் ஆளணும்
குங்குமக்காரியே பொறுப்பேற்கும் தேவியே
உன் பிள்ளை வாடுதம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே



காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா
கழுத்தில் மாலை விழ நெனச்சது தப்பா தாயே
அம்மா....
கல்யாணம் தான் மாறி போனது தப்பா
காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே
அம்மா....
சூறாவளி காத்து சுத்தி வந்து
சொந்தம் எல்லாம் மாறி போனதம்மா
காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு
நேர்த்திக் கடன் செய்ய வந்தேனம்மா
பூவுக்கும் பொட்டுக்கும் ஆசப்பட்டு வந்தேன்
வேறென்ன கேட்டேனம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - Un nenja thottu sollu lyrics

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தண்ணிக்குள்ளே முக்குளிச்சு
முத்து ஒன்னு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலிலே சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குமம்மா
சாமியும் தான் எனக்கு இங்கே
வேடிக்கை தான் நடத்துதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தாகத்திலே சிப்பி ஒன்னு
தண்ணிக்குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர்க்குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பிளன்னு இங்கில்லயா
ஆயிரமும் உனக்கிணையா
எனக்கு அது வழித்துணையா
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலச் சொல்லு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா - Poongaathu thirumbumaa en paata virumbumaa lyrics

பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே கதை உலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா



என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்தை வாங்குனேன்
தூக்கத்த வாங்கல
இந்த வேதனை யாருக்குத் தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆள் இல்ல

ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சுக ராகம் சோகம் தானே
சுக ராகம் சோகம் தானே
யாரது போறது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா



உள்ள அழுகுறேன் 
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேசந்தான் 
வெளுத்து வாங்குறேன்
உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீ தானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
நான் தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே - Kathal vaibogame kaanum nannaalithe lyrics

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே



கோடைக் காலத்தில் தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மழைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட.. கூட..
பூவில் மேடை அமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாணப் பரபரப்பு

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே



எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன் என்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது பாவம்.. தாபம்..
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம்.. யோகம்..

வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மமெடுப்பேன்

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் - Pesa koodaathu verum pechil sugam lyrics

பேசக் கூடாது....
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. ஹோய்
ஏதும் இல்லை வேகம் எல்லை
லீலைகள் காண்போமே..

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
ஆசை கூடாது....



பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
ஆலில் ஆடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ
இலையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா.. ஆ
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
பேசக் கூடாது....



காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு
உரிமை தர வேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. ஹோய்
ஏதும் இல்லை வேகம் எல்லை
லீலைகள் காண்போமே..

உருகி உருகி போனதடி என் உள்ளம் - Urugi urugi ponathadi en ullam lyrics

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
நீ இன்றி மூடுமே
என் வானம்
நீ தானே என் காதலே
எந்நாளும்

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே



யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
ஆடை காலின் அணிகளோ
கரைகளில் கரையும்
வெண்ணுரை
கதைத்திடும் மொழிகளா
விழிகளின் வளைவில்
வானவில்
நிறங்களே காதலா

நீ இன்றி மூடுமே
என் வானம்
நீ தானே என் காதலே
எந்நாளும்

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகிப் போனதடி
என் எண்ணம் யான் நீயே

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகிப் போனதடி
என் எண்ணம் யான் நீயே

ஏழைகள் வாழ நீ செய்த யாகம் - Elaigal vaala nee seitha yaagam lyrics

ஏழைகள் வாழ
நீ செய்த யாகம்
என்னென்னவென்று எங்கே சொல்வேன்
அன்பாலே சேர்ந்த
நெஞ்சங்கள் வாழ
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்

இன்றைக்கும் என்றைக்கும்
நீ எங்கள் நெஞ்சத்தில்
அன்புக்கும் பண்புக்கும்
நீ அந்த சொர்க்கத்தில்

மன்னவன் காவிய நாயகனே
என்னுயிர் தேசத்துக் காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் உன் புகழ் வாழியவே


சின்னச் சின்ன தூரல் என்ன - Chinna chinna thooral enna lyrics

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன....



உனது தூரலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா
அது தீண்டும் மேகம் இல்ல
தேகம் சிலிர்க்குதம்மா
உனது தூரலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில்
குளிர்ந்த மனதினில்
ஏனோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின்
பசியும் தாகமும் 
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமமென
உணர்த்திடும் மழையே
சின்னச் சின்ன....

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூரல் என்ன



பிழைக்கு யாவரும்
தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
படிச்சவன் பாட்ட கெடுத்தான்
கதையா இல்ல இருக்கு
பிழைக்கு னு எழுதலயே
மழைக்கு னு தான எழுதிருக்கேன்
ஓஹோ.. 
மழைக்கு யாவரும்
தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும்
வானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை
பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் 
புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால்
பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி எனும் இசை முழங்கிட வரும்
மழையெனும் மகளே
சின்னச் சின்ன....

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன....