நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
கீழ்வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
மணிமாளிகை மாடங்களும்
மலர்தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
No comments:
Post a Comment