பூவே பூச்சுடவா எந்தன் நெஞ்சில் - Poove Poochoodava Enthan Lyrics

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் சீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்

கண்களும் ஓய்ந்தது
ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே

பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ(நான்) என்(உன்) மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

No comments:

Post a Comment