நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு
வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
காணும் கனவெல்லாம்
என்றும் நீதானே
என் கனவெல்லாம் நினைவாக
வா வா கண்மணியே
வீசும் காற்றில்
தூசாய் ஆனேனே
உனை எங்கோ மனம் பேச
உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும்
திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் ஏழேழும்
நாம் வாழ்வதைத் தடுத்திட முடியாது
வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
காதல் பிரிவென்றால்
உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே
உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும்
என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள்
கண்ணீர் வடிக்கிறதே
உன்னோடு நானும்
நிழலாக வருவேனே
உடலோடு உயிராக
நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாதே
வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு
வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
No comments:
Post a Comment