போராடடா ஒரு வாளேந்தடா - Poraadada oru vaalenthada lyrics

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன்னுதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா



எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
நந்தனினமே பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
நந்தனினமே பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
எட்டு திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளிவெள்ளம் வரும் வரை
வேர்வைக் குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும் வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன்னுதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா



இன்னும் இங்கு பள்ளுப் பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென ஆகுதடா
சின்னப் பொறியே பெரும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே
சின்னப் பொறியே பெரும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே
அஞ்சி நின்ற பஞ்சப் படையே
கொஞ்சமது நெஞ்சு நிமிர்கையில்
எங்கள் மனம் பொங்கி அழுகையில்
குங்கும கங்கையும் கொஞ்சிடுமே
மலைகளும் சாய்ந்து போகுமோ

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன்னுதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா

No comments:

Post a Comment