ஒரு முறை தான்
மனிதனின் வாழ்க்கை
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
வாழ்க்கையில் திருமணம்
ஒரு முறை தான்
ஊரே வந்து பூத்தூவ
ஊர்வலம் போகும் கல்யாணம்
அம்மா அப்பா கைசேர்த்து
அட்சதை போடும் சந்தோஷம்
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள்
ஒரு முறை தான்
பெற்றவர்க்கு பிள்ளைகளால்
சந்தோஷம் சில முறை தான்
எத்தனையோ ஆசை
எத்தனையோ ஏக்கம்
சுமந்திருந்த தந்தையின் நெஞ்சை
நொறுக்கிவிட்டு சேர்ந்தோம்
கனவுகளும் கோடி
கற்பனைகள் கோடி
பெற்றவர்கள் கட்டிய கூட்டை
கலைத்து விட்டு சேர்ந்தோம்
உடைந்த உறவு வருமா
இழந்த மானம் வருமா
இனியும் வசந்தம் வருமா
காலம் திருப்பித் தருமா
வெறுமை நெஞ்சை அறுக்க
வலிக்கிறதே
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு சில தவறுகள்
ஒரு முறை தான்
ஒரு முறை தான் தவறியதால்
அடைகிற வேதனை
பல முறை தான்
யார் விழியின் நீரை
யார் துடைக்க என்றே
உறவுகளின் நினைவுகள் வரவே
வெந்து எரிகின்றோம்
ஆதரவும் இல்லை
ஆறுதலும் இல்லை
இருவருமே இடியைத் தாங்கி
இறந்து வாழ்கின்றோம்
ஒன்றாய் கூடி அமர்ந்து
அன்பாய் உணவு பகிர்ந்து
தாயின் மடியில் கிடந்து
பாசம் பருகும் நிமிஷம்
இனிமேல் என்று கிடைக்கும்
தெரியவில்லை
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
தாய் வழி வருவது
ஒரு முறை தான்
தாய்மையை அடையும் பெண்ணுக்கு
தாய் வந்து செய்யும் மருத்துவங்கள்
குழந்தையின் குரலை
முதன் முதலாய் கேட்கையில்
தோன்றும் பரவசங்கள்
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள்
ஒரு முறை தான்
பிஞ்சு நிலா பிறந்து வந்தால்
பெற்றவர் கிடைப்பார்
மறு முறை தான்