உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால்
ஆடும் பாத்திரங்கள்
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
தேவன் என்றால் தேவனல்ல
தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவனல்ல
எனைப்போல் இல்லை சலனம்
நீயோ வானம் விட்டு
மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து
தங்கிச் செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ
இங்கே வளர்ந்தாயோ
காற்றே நீயே
சேற்றின் வாடை கொள்ள வேண்டும்
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
தாய்ப் பறவை மிதித்தால்
சேய்ப் பறவை நோவதில்லை
காயம் ஆவதில்லை
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
No comments:
Post a Comment