நீ கவிதைகளா கனவுகளா - Nee Kavithaigalaa Kanavugalaa Lyrics

நீ கவிதைகளா கனவுகளா
கயல் விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா 
பதில் மொழியே
உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே


மழையோடு நனையும்
புது பாடல்
நீ தான் அழகான திமிரே
அடியே அடியே
காற்றோடு பரவும்
உன் வாசம் தினமும்
புது போதை தானே
சிலையே அழகே..... அழகே....

நான் உனக்கெனவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே
நீ எனக்கெனவே
கரம் விரித்தாய்
என் வரமே


மந்தாரப் பூ போல
மச்சம் காணும் வேள
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல
முழு மதியினில்
பனி இரவினில்
தனி பொழுதினில்
ஓடாதே

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

நீ கவிதைகளா கனவுகளா
கயல் விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா....
உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

No comments:

Post a Comment