அவனுக்கென்ன தூங்கி விட்டான் - Avanukenna thoongi vittaan lrics

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்



யானையிடம் நன்றி வைத்தான்
காக்கையிடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

வானிலுள்ள தேவர்களை 
வாழ வைக்க விஷம் குடித்தான்
வானிலுள்ள தேவர்களை 
வாழ வைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

No comments:

Post a Comment