சாதி மல்லி பூச்சரமே - Saathi malli poocharame lyrics

சாதி மல்லி பூச்சரமே
சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் 
இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி



எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்று தான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் 
ஒன்று தான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோனும்
அதில் இன்பத்தைத் தேடோனும்

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி



உலகமெல்லாம் உண்ணும் போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்க தான் பாடலா நெனச்சு பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் 
இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு

No comments:

Post a Comment