ஒரு மடமாதும் ஒருவனுமாகி - Oru madamaathum oruvanumaagi Lyrics

ஒரு மடமாதும் ஒருவனுமாகி 
இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து 
ஊருசுரோநிதமீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது 
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று 
பார்வை மெய் வாய் செவி கால்கைகள் என்ற
உருவமுமாகி உயிர்வளர்மாதம் 
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து 
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிநடை ஊறல் இதழ்மடவாரும் 
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து 
வாய் இரு போவென நாமம் விளம்ப
உடைமணியாடை அரைவடமாட 
உண்பவர் திண்பவர் தங்களோடுண்டு
தெருவில் இருந்து புழுதியடைந்து 
தேடிய பாலரொடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே.......


உயர்தரு ஞான குரு உபதேசம் 
முத்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப 
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மதனஸ்வரூபன் இவன் என மோக 
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழியை அறிந்து 
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி 
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி 
வன்பல் விழுந்திரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரை திரை வந்து 
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே......


வருவது போவது ஒரு முதுகூனும் 
மந்தியெனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து 
வாயறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலஜலம் வந்து 
கால்வழிமேல்வழி சார நடந்து
கடன்முறை பேசும் என உரை நாவும் 
உறங்கி விழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து 
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே....


வளைபிறை போல எகிறுமுறோ 
அவரும் சடையும் சிறுகுஞ்சி உவிஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இழந்த 
மாமலை போல் எமதூதர்கள் வந்து
வலைக்கொடு வீசி உயிர்க்கொடு போக 
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப 
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் என ஓடி 
வந்திழ மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து 
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல் கொடு போட 
வெந்து விழுந்து முறிந்தினினங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி 
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆழுமே....

No comments:

Post a Comment