கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
பாசம் மீறி சித்த தாளம் போடுதே
உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆ.. ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
பதுமை போலே காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
ஆ.. மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஆ... ஆ.. ஆ...
No comments:
Post a Comment