அன்புக்கதை வம்புக்கதை - Anbukathai Vambukathai Lyrics

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

கண்பட்டதனால் புண்பட்டது நான்
கண்பட்டதனாலே மனம் புண்பட்டது நானே
அந்தக்கதை துன்பக்கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே


பூவொன்று மணம்வீசி புதுராகம் பாட
புரியாத புதிராகி திசை மாறிப்போக
பூவொன்று மணம்வீசி புதுராகம் பாட
புரியாத புதிராகி திசை மாறிப்போக
காதல் ஒரு ஓடம் அது ஓடும்பொழுது
நாளும் தடுமாறும் அலைமோதும் பொழுது
காதல் ஒரு ஓடம் அது ஓடும்பொழுது
நாளும் தடுமாறும் அலைமோதும் பொழுது
கருவில் உருவாகும் ஒரு உயிரின் கதையே
உயிரில் உறவாகும் அது காதல் கதையே
பழிபாவம் அறியாது அது எந்தன் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே


நீரோடும் நதியோரம் நானும் ஒரு தோணி
கரைசேர முடியாமல் வாழும் ஒரு ஞானி
நீரோடும் நதியோரம் நானும் ஒரு தோணி
கரைசேர முடியாமல் வாழும் ஒரு ஞானி
காணும் விழியோரம் புது காதல் வரவு
காதல் வழிமாற தினம் கண்ணீர் செலவு
காணும் விழியோரம் புது காதல் வரவு
காதல் வழிமாற தினம் கண்ணீர் செலவு
வாழும் வரைதானே வரும் வரவும் செலவும்
போகும் வரைதானே வரும் உறவும் பிரிவும்
ஒரு பாசம் அதில் நேசம் அது யாவும் கனவு

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

கண்பட்டதனால் புண்பட்டது நான்
கண்பட்டதனாலே மனம் புண்பட்டது நானே
அந்தக்கதை துன்பக்கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

சின்ன சின்ன கண்ணனுக்கு - Chinna Chinna Kannanuku Lyrics

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ


பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
சிட்டு போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே
என் வயது மாறுதுடா
உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ


ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே
என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வ மொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ


பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லை ஒரு துன்பமடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ

சொன்னது நீதானா - Sonnathu Neethana Lyrics

சொன்னது நீதானா 
சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே

சம்மதம் தானா
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே

இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே


மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே
இறுதிவரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே

இன்று சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே


தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
ஒரு கொடியில் ஒருமுறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒருமுறை தான்
வளரும் உறவல்லவா

இன்னொரு கைகளிலே....

பதினெட்டு வயது இளமொட்டு மனது - Pathinettu Vayathu Ilamottu Lyrics

லலலா லல லலலலலா லலலா லல லலலலலா
லலலலலா லாலலா லலலல லாலாலாலாலாலா

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனிகொட்டும் இரவு பால் வண்ண நிலவு
வேண்டுது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்னப்பொண்ணு செவ்வரிக்கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட


மாணிக்கத்தேரு மணிமுத்து ஆறு
மாணிக்கத்தேரு மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு.. ஆஹாங்
அந்த பாயப்போட்டுத் தான் ஒறங்கு
நான் விடமாட்டேன் தூண்டில போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு.. ஐயோ
இது காலதேவனின் கணக்கு
கூசுது ஒடம்பு குலுங்குது நரம்பு
நீ என்ன ஒரசாதே.. ஓ.. 
கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்ன வெலகாதே...

ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா
சும்மா நின்னா மாமன கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுனு சுட்டா
தாமரை வெடிக்காதா

ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ..


மாங்கனிச்சாறும் செவ்விளநீரும்
மாங்கனிச்சாறும் செவ்விளநீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அவை மீண்டும் மீண்டும் நீ எடுக்க
மூக்குத்திப்பூவே மோக நிலாவே
தேன வாரி தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
மன்மத பானம் காயுற நேரம்
வீரத்த நெலநாட்டு
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு

பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனை தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்
மஞ்சத்தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ள நீயாச்சு
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனிகொட்டும் இரவு பால் வண்ண நிலவு
வேண்டுது உறவாட

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர - Vandikaran Sontha Ooru Lyrics

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை
ஓ.. பொன்னப்போலதான் பூவப்போலதான்
கட்டிப் பாப்பவன் நான்தான் நான்தான்
ஓ.. கட்டிப்பாக்கவும் தட்டிக்கேக்கவும்
நீயும் பாக்கணும் நாள் தான் நாள் தான்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை


முன்னால தான் மூடிவச்ச சேலை
ஹோஹோ ஹொய்
முத்தாடத்தான் தூண்டுதடி ஆள
ஹோஹோ ஹொய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
கண்ணால தான் டாவடிக்கும் வேளை
காட்டி இங்கு நிக்கிறியே வால
சும்மா நின்னா வேகம் தான் வருது
வெக்கப்போர பாத்துச்சே எருது
கண்ணாலந்தான் ஆகலே நகரு
கிட்டவந்தா ஆயிடும் தவறு
அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை


ஏத்தம் ஒன்னு ஓடுகிற போது
ஹோஹோ ஹொய்
ஏத்துக்காத நெல்லுவயல் ஏது
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்.. ஆ.. ஆ...ஆ..
கேணித்தண்ணி எங்கே போகும் சொல்லு
காலம் வர காத்திருக்கும் நெல்லு
ஒத்துக்கடி ஏறுதடி ஆவல்
மத்ததுக்கு நான் தான் காவல்
துப்பறிய பாக்குறே லேசா
ஒன்னப்பத்தி தெரியும் ராசா
அட போட்டானே பூபானம் வேளக்கெட்ட மம்முதா..

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை
ஓ.. பொன்னப்போலதான் பூவப்போலதான்
கட்டிப் பாப்பவன் நான்தான் நான்தான்
ஓ.. கட்டிப்பாக்கவும் தட்டிக்கேக்கவும்
நீயும் பாக்கணும் நாள் தான் நாள் தான்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை
மதுர குதிரை...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா - Super Staru Yaarunu Ketta Lyrics

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்ப ஏத்துங்க கெட்டப்ப மாத்துங்க
செட்டப்ப மாத்தாதீங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா.. ஹ ஹ ஹ...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்


உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
போட்ட லவுக்க துடிக்குது ஐயா
இதுக்கு வைத்தியம் உண்டா
கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு
காரியம் மீறினா மெத்தை இருக்கு
ஹோஹொய் ஹோஹொய் ஹோஹொய் ஹொய்
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டிலோ ரெண்டுக்கு சொல்லி இருக்கு
எங்கெங்கு சுகமென்று இலக்கணம் இருக்கு

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் 
ஸ்யூர் ஸ்யூர்
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஹ ஹ ஹ...
ஹ ஹ ஹ...


நெத்தியில் புரளும் கொத்தமுடி விலக்கி
முத்தங்கள் தர ஒரு ஆச
கண்மணி ஒனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக்கொள்ள ஆச
என்னமோ மாறுது புத்தி ஒனக்கு
என் குங்குமம் எங்கயோ ஒட்டி இருக்கு
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு
நான் அள்ளவோ கிள்ளவோ சொந்தம் இருக்கு
அப்பா.. என்றாலும் அதுக்கொரு இடம் பொருள் இருக்கு

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் துள்ளும்
மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா.. ஹோய்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணா கேளு
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்


விக்ரம் விக்ரம் - Vikram Vikram Lyrics

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..
நான் வெற்றி பெற்றவன் 
இமயம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையை சூடும்

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

தரததா தரததா தரததா ..


பேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
பேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும் ஹஹா..
என் பேர் சொல்லும்
ஓ.. உறவுகள் எனக்கென இருந்தது
ஆ.. கனவுகள் பாதியில் கலைந்தது
ஆம் பழி எனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹா.. பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

தகிட தகதிமிதா.. தீம்த 
தகிட தகதிமிதா.. தீம்த
தகிட தகதிமிதா.. தீம்த.. தகிட ஹூஹூஹா..

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

தததா தததா தததா..


யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
இனி ஒரு விதி செய்வோம் இன்றே
ஜெகத்தை வென்றே
தீமை கொன்றே
செய்தோம் நன்றே
ஹே.. பகைவனுக்கருள்வது பிழையே
வா.. பகைவனை அழிப்பது முறையே
ம்.. பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம்.. அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

தகிட தகதிமிதா.. தீம்த 
தகிட தகதிமிதா.. தீம்த
தகிட தகதிமிதா.. தீம்த.. தகிட ஹூஹூஹா..

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

நான் வெற்றி பெற்றவன் 
இமயம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையை சூடும்

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

வெள்ளிமலை மன்னவா வேதம் - Vellimalai Mannavaa Vedam Lyrics

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா
முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா

வெள்ளிமலை மன்னவா... ஆ...

வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம் செயக்கொடி தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம் செயக்கொடி தான் கொள்வதென்ன

தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக்கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக்கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு

ஆ.. ஆ...ஆ...

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளிமலை மன்னவா.. ஆ....

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் - Ninaivugal Nenjinil Puthainthinal Lyrics

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலைக் காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்


காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னைக் காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்துபோக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்கக் கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலைக் காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே - Chandirane Sooriyane Natchathira Lyrics

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்தடா மனசும் அங்கே சிவந்ததடா
சுட்டவடு ஆறல நெஞ்சில் பட்டபின்பு மாறல
சுட்டவடு ஆறல பட்டபின்பு மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே


நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அணைக்கமுடியுமா
கண்ணிலே முள்ளு தச்சா இமையும் மூட முடியுமா
பாரதக்கதையும் கூட பழியில் முடிஞ்ச காவியந்தான்
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில
நான் மறஞ்சபின்பும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே


நீயும் நானும் வாழணும்னா தீமையெல்லாம் தீயிடு
கெட்டதிங்கு அழியணும்னா கொடுமையெல்லாம் பலிகொடு
கண்ணன் கீதையில சொன்னதப்போல் நடந்திடு
பச்சப்பயிர் வாழ மண்ணில் களையெடுத்தா தவறில்ல
பச்சப்பயிர் வாழ மண்ணில் களையெடுத்தா தவறில்ல
அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புதுக்கத நான் எழுதல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்தடா மனசும் அங்கே சிவந்ததடா
சுட்டவடு ஆறல நெஞ்சில் பட்டபின்பு மாறல
சுட்டவடு ஆறல பட்டபின்பு மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

துள்ளித் திரிந்ததொரு காலம் - Thulli Thirinthathoru Kaalam Lyrics

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்


அன்னை மடிதனில் சிலநாள்
அதை விடுத்தொரு சிலநாள்
திண்ணை வெளியினில் சிலநாள்
உண்ண வழியின்றி சிலநாள்
நட்பின் அரட்டைகள் சிலநாள்
நம்பித்திரிந்ததும் பலநாள்
கானல் நீரினில் சிலநாள்
கடல் நடுவிலும் சிலநாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்


துள்ளும் அலை என அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லையென நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறியென வளைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மைக் கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு - Thalattu Ketkaatha Peringu Lyrics

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை


ஆவாரங்காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேணும்
தாயுண்ண சேயும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேணும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு
ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
தோற்கேட்டு போவானே அவர் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை


நாடாளும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு ஒன்ன பெத்த தாரு
விஞ்ஞானி ஆனாலும் மெய்ஞானி ஆனாலும்
தாய் தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய் தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு

நான் ஏரிக்கர மேலிருந்து - Naan Yerikara Melirunthu Lyrics

நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
ஒத்தையில வாடுறேனே இக்கரையில

நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல

நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல

என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்தெச பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல


தூரக்கிழக்குக் கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
ஒங்கிட்டச் சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்தக்காலில் நின்னேனே
செந்நாரி கூட்டத்தோடு சேதி ஒன்னு சொன்னேனே
கண்ணாளம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல


மாமன் நெனப்பில் சின்னத்தாயி தான்
மாசக்கணக்கில் கொண்ட நோயி தான்
மச்சான் கை பட்டாத் தான் முச்சூதும் தீராதோ
அக்காளின் பொன்னுக்கோ பொற்காலம் வாராதோ
கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணக்காட்டி மையல் தீரப்பேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில

நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும் - Kottaya Vittu Vettaiku Pogum Lyrics

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கொட்ட வேணும் மேளம் கைய கட்டவேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்குச் சொல்லும் நேரம்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி


அந்நாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா
விலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல
அந்நாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா
விலை ஏறிப் போவுது மார்க்கெட்டுல
விலை ஏறிப் போவுது மார்க்கெட்டுல
என்னாட்டம் ஏழைங்க அத வாங்கித் திங்கத்தான்
துட்டில்ல சாமி என் பாக்கெட்டுல
துட்டில்ல சாமி என் பாக்கெட்டுல

வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரமொன்னு வைக்க சொல்லுறாங்க
மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாய மெல்லுறாக

எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் ஒன்னால தான்
கண்ணால பாரு நேராக்கி காட்டு முன்னால தான்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி


ஊர்சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
ஊர்சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம
எந்நாளும் தாய் என காக்கணுமே
ஒங்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே

எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
பொல்லாங்கு பேசும் ஊர்சனந்தான்
புண்ணாகிப் போச்சே என் மனம் தான்

என்னாட்டம் சாமி எல்லோர்க்கும் சொந்தம் எப்போதும் தான்
என்னோட நீயும் உன்னோட நானும் எந்நாளும் தான்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கொட்ட வேணும் மேளம் கைய கட்டவேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்குச் சொல்லும் நேரம்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி