ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
ஒத்தையில வாடுறேனே இக்கரையில
நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல
நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்தெச பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
தூரக்கிழக்குக் கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
ஒங்கிட்டச் சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர ஒத்தக்காலில் நின்னேனே
செந்நாரி கூட்டத்தோடு சேதி ஒன்னு சொன்னேனே
கண்ணாளம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது
நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
மாமன் நெனப்பில் சின்னத்தாயி தான்
மாசக்கணக்கில் கொண்ட நோயி தான்
மச்சான் கை பட்டாத் தான் முச்சூதும் தீராதோ
அக்காளின் பொன்னுக்கோ பொற்காலம் வாராதோ
கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணக்காட்டி மையல் தீரப்பேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு
நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல
No comments:
Post a Comment