தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
ஆவாரங்காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேணும்
தாயுண்ண சேயும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேணும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு
ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
தோற்கேட்டு போவானே அவர் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
நாடாளும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு ஒன்ன பெத்த தாரு
விஞ்ஞானி ஆனாலும் மெய்ஞானி ஆனாலும்
தாய் தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய் தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு
No comments:
Post a Comment