சொன்னது நீதானா - Sonnathu Neethana Lyrics

சொன்னது நீதானா 
சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே

சம்மதம் தானா
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே

இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே


மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே
இறுதிவரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே

இன்று சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே


தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
ஒரு கொடியில் ஒருமுறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒருமுறை தான்
வளரும் உறவல்லவா

இன்னொரு கைகளிலே....

No comments:

Post a Comment