சொன்னது நீதானா
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே
இறுதிவரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே
இன்று சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
ஒரு கொடியில் ஒருமுறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒருமுறை தான்
வளரும் உறவல்லவா
இன்னொரு கைகளிலே....
No comments:
Post a Comment