நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் - Ninaivugal Nenjinil Puthainthinal Lyrics

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலைக் காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்


காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னைக் காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்துபோக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்கக் கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலைக் காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

No comments:

Post a Comment