ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு - Ondrenriru Deivam Undenriru Lyrics

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்றென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு


பசித்தோர் முகம் பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
ஆ..ஆ..ஆ...
பசித்தோர் முகம் பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே 
நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே


நாட்டமின்றே இரு 
சத்குரு பாதத்தை நம்பு
நாட்டமின்றே இரு 
சத்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு
பொல்லா உடலை
ஆ.. ஆ...ஆ...
பொம்மலாட்டமென்றே இரு
பொல்லா உடலை
அடர்ந்த சந்தை கூட்டமென்றே இரு
சுற்றத்தை அடர்ந்த சந்தை கூட்டமென்றே இரு
சுற்றத்தை வாழ்வை
உடன்கவிழ் நீர்
ஓட்டமென்றே இரு
சுற்றத்தை வாழ்வை
உடன்கவிழ் நீர்
ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்றென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு

இளமை கொலுவிருக்கும் இனிமை - Ilamai Koluvirukum Inimai Lyrics

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே


அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும்
கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ
பெண் இயற்கையின் சீதனப்பரிசல்லவோ

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே


பொன்னும் பொருளும் வந்து
மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
பொன்னும் பொருளும் வந்து
மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
இன்று தேடிவரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா
எந்த செல்வமும் பெண்மையின்
சுகம் தருமா

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே

அண்ணன் காட்டிய வழியம்மா - Annan Kaatiya Vazhiyamma Lyrics

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா


அடைக்கலமென்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்துவிட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா


அவனை நினைத்தே நான் இருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
அவனை நினைத்தே நான் இருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

எட்டடி கோயிலிலே நீ வசிக்க - Ettadi Koyilile Nee Vasikka Lyrics

மாயா உலகத்திலே
மதி மயங்கி நில்லாமல்
உன் மங்காத ஜோதியிலே
மகிழ்வது தான் எக்காலம்
மகிழ்வது தான் எக்காலம்

எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமய்யா
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால் 
மாயா நித்திரை மறையுமய்யா
மாயா நித்திரை மறையுமய்யா
மாயா நித்திரை மறையுமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா


தேயாத நிலவு என்றே
தேகத்தை எண்ணாமல்
திகட்டாத ஜோதியிலே
திகழ்வது நான் எக்காலம்
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையால் ஆடுதய்யா
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையால் ஆடுதய்யா
ஐம்புலச் சிறைதனிலே
ஐம்புலச் சிறைதனிலே
நீ அமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா
ஐம்புலச் சிறைதனிலே
நீ அமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா


காயாகி கனியாகி
கனிந்திடும் நிலையாகி
கண்ணான ஜோதியிலே
கலப்பது நான் எக்காலம்
கலப்பது நான் எக்காலம்
பாதத்தின் சதங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
பாதத்தின் சதங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
பக்குவ நிலை அடைந்தால்
பக்குவ நிலை அடைந்தால்
என் வாழ்வும் பண்புடன் இனிக்குமய்யா
பக்குவ நிலை அடைந்தால்
என் வாழ்வும் பண்புடன் இனிக்குமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா

யார் போய் சொல்லுவார் - Yaar Poi Solluvaar Lyrics

பிறந்தது மண் மேல் 
இறப்பதற்கென்றே பேசிடும் ஊன்
பிறந்தது மண் மேல்
இறப்பதற்கென்றே பேசிடும் ஊன்
துறந்தனர் சுகமும்
துக்கத்திற்கு ஈடெனும் 
சொல்லும் கண்டேன்

கரம்தனைக் கூப்பி
சுடலையைக் காக்க
கனிவு கொண்டேன்
வரம் தந்து வாழ்த்திட
சிவனே நின்பாதமே
சரண் புகுந்தேன்
நின்பாதமே
சரண் புகுந்தேன்

யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்


பார்தனிலே தன் பத்தினியை இழந்து
பார்தனிலே தன் பத்தினியை இழந்து
பரதவிக்கும் நிலையை
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்

விதியே உனக்கொரு முடிவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
எதிரேதும் இல்லாத
செங்கோலை இழந்தேன்
எதிரேதும் இல்லாத
செங்கோலை இழந்தேன்
விதியேதும் இல்லாமல்
சுடுகோலை அடைந்தேன்
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்

காசியில் வாழும் கருணைக் கடலே - Kaasiyil Vaalum Karunai Kadale Lyrics

காசியில் வாழும் கருணைக் கடலே
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே


பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே


தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
சஞ்சலம் தீர விஸ்வநாதா.. ஆ...ஆ...
சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே

கண் இழந்த பிள்ளைக்கு - Kan Ilantha Pillaiku Deivam Lyrics

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது

தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது
அந்த மரக்கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
அந்த மரக்கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
தந்ததொரு அன்பு கண்டு
தந்தை தன்னை மறந்ததுண்டு

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது

ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது காலம் என்னும்
மாயக்காரன் லீலை அம்மா

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


தேவன் அவன் கோயிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ
செல்வ மழை பொழிகிறது

தேவன் அவன் கோயிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ
செல்வ மழை பொழிகிறது
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
உன்னுடைய வசந்தத்திலே
ஒன்றுமில்லை ருசிப்பதற்கு

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்

சித்திரத்தில் பெண் எழுதி - Chithirathil Pen Eluthi Lyrics

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே


காவியத்தில் காதல் என்றால்
கரைந்துருகும் கற்பனையே
காவியத்தில் காதல் என்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண் நிறைந்த காதலுக்கே
கண்ணீர் தான் உன் வழியோ
கண் நிறைந்த காதலுக்கே
கண்ணீர் தான் உன் வழியோ
கண்ணீர் தான் உன் வழியோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே


அன்னையென்றும் தெய்வமென்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
அன்னையென்றும் தெய்வமென்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுத தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன் தானோ
இன்னமுத தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன் தானோ

மன்னர் குல கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மன்னர் குல கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கே
வாய்த்த விதி இது தானோ
வாய்த்த விதி இது தானோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட - Oru Kaalathile Ennai Katti Poda Lyrics

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது


அட நாலு செவத்துல பிஞ்சு கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அட நாலு செவத்துல பிஞ்சு கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அந்த கோடு கிழிச்சவன் கூட இருக்கையில்
வீடு சிரிச்சதய்யா
இந்த வீடு சிரிச்சதய்யா

நல்ல புத்தி இருந்தது சக்தி இருந்தது
பிள்ளை இருக்கையிலே
இப்ப பித்து பிடிச்சது
ரத்தம் கொதிச்சது தன்னந்தனிமையிலே
இன்று தன்னந்தனிமையிலே

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது


அவன் கள்ளச்சிரிப்பிலே என்னை மயக்கிய
கண்ண பரமாத்மா
அவன் கள்ளச்சிரிப்பிலே என்னை மயக்கிய
கண்ண பரமாத்மா
அவன் போட்ட விலங்கினில் மாட்டி தவிக்குது
சின்னஞ்சிறு ஆத்மா
சின்னஞ்சிறு ஆத்மா

அவன் பேசும் மழலைகள்
ஊதும் குழலென காதில் இனிச்சதய்யா
இந்த மீசைக் கிழவனின் ஆசைக் குழந்தையை
காலம் பிரிச்சதய்யா
கலி காலம் பிரிச்சதய்யா

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது


இந்த பாட்டன் படுகிற பாட்ட நெனச்சா
பாசம் புரியலயா
இந்த பாட்டன் படுகிற பாட்ட நெனச்சா
பாசம் புரியலயா
அது பாட்டி மனசயும் வாட்டி எடுப்பது
பார்த்தா தெரியலயா
பார்த்தா தெரியலயா

அட ஊரார் குழந்தைய ரெண்டு கிழங்களும்
ஊட்டி வளர்த்ததய்யா
இப்ப ஓட்ட படகென பாசச் சுழலிலே
மாட்டி முழிக்குதய்யா
பாவம் மாட்டி முழிக்குதய்யா

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது