ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாள் ஆகுமா
ஆராரிரோ பாடியதாரோ யாரோ
நியாயம் இல்லையே
நான் முந்திப் போகவே
யோகம் இல்லையே
கூட்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த
குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு
ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ
எனக்காரோ யாரோ
பொழுதாகிப் போனதே
இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது
தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பாலூட்டிப் பார்த்தியே பாலூத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன்
என்ன நானே நொந்தேன்
ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாள் ஆகுமா
ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ
எனக்காரோ யாரோ
No comments:
Post a Comment