வைகைக் கரைக் காத்தே நில்லு - Vaigai Karai Kaathe Nillu Lyrics

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு



திருக்கோவில் வாசலது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜையது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணீர் விடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும் 
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும் 
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்

காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு



மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடை ஒளி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ 
சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ 
சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ

காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு

No comments:

Post a Comment