பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் - Pattu Vanna Rosaavaam Paartha Kannu Moodaathaam Lyrics

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
அடி சத்தியமா
அடி சத்தியமா நான் இருப்பேன் உன்னாலே
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
உன்ன காத்திருப்பேன்
உன்ன காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்
இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

No comments:

Post a Comment