சலங்கையிட்டால் ஒரு மாது - Salangayittaal Oru Maathu Lyrics

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

தக்கத்தகதிமி தக்கத்தகதிமி
தக்கத்தகதிமிதோம்.....



தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப்பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும்
நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர் விட்டு
பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு



சந்தன கிண்ணத்தில்
குங்கும சங்கமம் 
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட 
வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் 
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

No comments:

Post a Comment