என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - En Jannal Nilavuku Ennaachu Lyrics

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லி சரமே
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்கோ

உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லி சரமா
மந்த மாருதம் எந்தன் மேனியில்
பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
உன் கண்ணில் பட்டு 
விட்டு நின்னாச்சு



எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான்
அது தெரியும்
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான்
அது புரியும்
கச்சை கட்டி பூ பூத்த 
பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க
தேன் பாய்ச்சுமே
பத்து விரல் போதாது
உன் மோகமே
லட்சம் விரல் நீ கொண்டு
வா வானமே
என் முத்து மணிச்சுடர்
முல்லை மலர்த்திடல்
நானும் வரேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு



முக்கனி அதில் முக்கியம் கொண்ட
முதல் கனி முதல் கனி
பார்த்துவிட்டேன்
பத்தினி பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் 
வேர்த்துவிட்டேன்
பூர்வ ஜென்ம ஓர் பந்தம்
நீ வந்தது
என்றும் இனி நீங்காது
நான் சேர்வது
தன்னந்தனித்தீவாக நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன் கைகள்
பூ போட்டது
உன் வெள்ளை மனசிலும்
வெட்க சிரிப்பிலும்
வாழ்ந்திருப்பேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லி சரமா
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்கோ

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு

No comments:

Post a Comment