தரை மேல் பிறக்க வைத்தான் - Tharai Mel Pirakka Vaithaan Lyrics

உலகத்தின் தூக்கம் கலையாதோ...
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ...
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ...

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்
தரை மேல் 
பிறக்க வைத்தான்........



கட்டிய மனைவி
தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே
அலையாய் அலைந்து
உயிரை கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும்
தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்



கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர்
துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜான் வயிரை
வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்
தரை மேல் 
பிறக்க வைத்தான்

No comments:

Post a Comment