உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - Un nenja thottu sollu lyrics

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தண்ணிக்குள்ளே முக்குளிச்சு
முத்து ஒன்னு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலிலே சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குமம்மா
சாமியும் தான் எனக்கு இங்கே
வேடிக்கை தான் நடத்துதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தாகத்திலே சிப்பி ஒன்னு
தண்ணிக்குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர்க்குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பிளன்னு இங்கில்லயா
ஆயிரமும் உனக்கிணையா
எனக்கு அது வழித்துணையா
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலச் சொல்லு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா - Poongaathu thirumbumaa en paata virumbumaa lyrics

பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே கதை உலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா



என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்தை வாங்குனேன்
தூக்கத்த வாங்கல
இந்த வேதனை யாருக்குத் தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆள் இல்ல

ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சுக ராகம் சோகம் தானே
சுக ராகம் சோகம் தானே
யாரது போறது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா



உள்ள அழுகுறேன் 
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேசந்தான் 
வெளுத்து வாங்குறேன்
உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீ தானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
நான் தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே - Kathal vaibogame kaanum nannaalithe lyrics

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே



கோடைக் காலத்தில் தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மழைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட.. கூட..
பூவில் மேடை அமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாணப் பரபரப்பு

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே



எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன் என்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது பாவம்.. தாபம்..
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம்.. யோகம்..

வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மமெடுப்பேன்

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் - Pesa koodaathu verum pechil sugam lyrics

பேசக் கூடாது....
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. ஹோய்
ஏதும் இல்லை வேகம் எல்லை
லீலைகள் காண்போமே..

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
ஆசை கூடாது....



பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
ஆலில் ஆடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ
இலையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா.. ஆ
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
பேசக் கூடாது....



காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு
உரிமை தர வேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. ஹோய்
ஏதும் இல்லை வேகம் எல்லை
லீலைகள் காண்போமே..

உருகி உருகி போனதடி என் உள்ளம் - Urugi urugi ponathadi en ullam lyrics

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
நீ இன்றி மூடுமே
என் வானம்
நீ தானே என் காதலே
எந்நாளும்

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே



யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
ஆடை காலின் அணிகளோ
கரைகளில் கரையும்
வெண்ணுரை
கதைத்திடும் மொழிகளா
விழிகளின் வளைவில்
வானவில்
நிறங்களே காதலா

நீ இன்றி மூடுமே
என் வானம்
நீ தானே என் காதலே
எந்நாளும்

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகிப் போனதடி
என் எண்ணம் யான் நீயே

உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகிப் போனதடி
என் எண்ணம் யான் நீயே

ஏழைகள் வாழ நீ செய்த யாகம் - Elaigal vaala nee seitha yaagam lyrics

ஏழைகள் வாழ
நீ செய்த யாகம்
என்னென்னவென்று எங்கே சொல்வேன்
அன்பாலே சேர்ந்த
நெஞ்சங்கள் வாழ
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்

இன்றைக்கும் என்றைக்கும்
நீ எங்கள் நெஞ்சத்தில்
அன்புக்கும் பண்புக்கும்
நீ அந்த சொர்க்கத்தில்

மன்னவன் காவிய நாயகனே
என்னுயிர் தேசத்துக் காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் உன் புகழ் வாழியவே


சின்னச் சின்ன தூரல் என்ன - Chinna chinna thooral enna lyrics

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன....



உனது தூரலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா
அது தீண்டும் மேகம் இல்ல
தேகம் சிலிர்க்குதம்மா
உனது தூரலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில்
குளிர்ந்த மனதினில்
ஏனோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின்
பசியும் தாகமும் 
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமமென
உணர்த்திடும் மழையே
சின்னச் சின்ன....

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூரல் என்ன



பிழைக்கு யாவரும்
தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
படிச்சவன் பாட்ட கெடுத்தான்
கதையா இல்ல இருக்கு
பிழைக்கு னு எழுதலயே
மழைக்கு னு தான எழுதிருக்கேன்
ஓஹோ.. 
மழைக்கு யாவரும்
தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும்
வானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை
பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் 
புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால்
பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி எனும் இசை முழங்கிட வரும்
மழையெனும் மகளே
சின்னச் சின்ன....

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன....

மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி - Manikuyil isaikuthadi manamathil mayanguthadi lyrics

மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி



கட்டழகு தோட்டம் கண்டால்
கம்பன் மகன் நானம்மா
சிட்டுவிழி சேதி சொன்னால்
அந்த சுகம் தேனம்மா
பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை
இன்று வந்து கூடுமோ
சட்டதிட்டம் ஏதும் இல்லா
பிள்ளை குணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும்
கார்கால மேகம்
பூக்கோலம் நாளும் தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி



ஆற்று நீரில் ஆட்டம் போட்டு
ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்று போலே
நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போனதா
சந்தனம் தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றி போனதா
நீராடும் மேகம்
தாலாட்டு கேளு
ஊர்கோலம் என்றும் தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி

கொத்த மல்லி வாசம் - Kotha malli vaasam lyrics

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்கு ஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்கு ஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்

கொத்த மல்லி வாசம்
கொத்து கொத்தா வீசும்
அப்படி தான் மாமா
அத்தை மவ நேசம்
வெண்ணையிலே மாமா நெய் வாசம்
என் திண்ணையிலே மாமா உன் வாசம்
கொத்த மல்லி வாசம்.. ஹோஹொய்
கொத்து கொத்தா வீசும்.... ஹோஹொய்
அப்படி தான் மாமா
அத்தை மவ நேசம்
வெண்ணையிலே மாமா நெய் வாசம்
என் திண்ணையிலே மாமா நா.. நா.. நாராசம்

நான் சென்ஸ்..
ஏய் என்ன திட்ற
ஒனக்கு பாட்டு தான வேணும்
டேய் பட்டாசு.. இப்ப பாரு பட்டய கெளப்புறேன்

ஹாய்..  வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஓய்.. வா முனிமா வா முனிமா வா முனிமா வா
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
வா முனிமா வா... வா முனிமா வா.. முனிமா
வா முனிமா வா... வா முனிமா வா



அதோ வர்றா பொன்னு 
நம்ம ஆயாக்கடை பன்னு
அதோ வர்றா பொன்னு 
நம்ம ஆயாக்கடை பன்னு
இளிச்சுடாத தின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல
நான் அடிச்சுடுவேன் கொம்புல
வா முனிமா வா... வா முனிமா வா.. ஓஹோ
வா முனிமா வா... வா முனிமா வா

ஒன்னும் ஒன்னு ரெண்டு
நான் கெணத்து கடவு நண்டு
ஒன்னும் ஒன்னு ரெண்டு
நான் கெணத்து கடவு நண்டு
நீயும் நானும் ஃபிரண்டு
உங்க வாத்தியாரு மண்டு
ஹேய்.. நாலு நாலு எட்டு
நம்ம பிரிக்க வந்தா வெட்டு.. ஆஹா
எட்டு ரெண்டு பத்து
நம்ம நண்பரெல்லாம் முத்து

ராவய்ய ராரா ராத்திரி ராரா.. எப்பா
ஜிங்கினு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா.. ஜிலுமா
ஜிங்கினு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிமா வா... வா முனிமா வா.. ஹேய்



ஐயோ எம்மா காலு
அங்க கொட்டிடுச்சாம் தேளு
ஐயோ எம்மா காலு
அங்க கொட்டிடுச்சாம் தேளு
அடி கை கொடுத்தான் ஆளு
நம்ம கழுத்தறுத்தான் பாரு
ஆஹா.. சும்மா நின்ன சங்கு
இங்க ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு
இல்ல எடுத்திடுவோம் நுங்கு

ராவய்ய ராரா ராத்திரி ராரா.. ஆ..
ஜிங்கினு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா.. ஜிலுபா
வா முனிமா வா முனிமா வா வா முனிமா வா...
வா முனிமா வா முனிமா வா வா முனிமா வா...
ஹோய்.. அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
வா முனிமா வா... வா முனிமா வா.. 
வா முனிமா வா... வா முனிமா வா..

போராடடா ஒரு வாளேந்தடா - Poraadada oru vaalenthada lyrics

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன்னுதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா



எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
நந்தனினமே பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
நந்தனினமே பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
எட்டு திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளிவெள்ளம் வரும் வரை
வேர்வைக் குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும் வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன்னுதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா



இன்னும் இங்கு பள்ளுப் பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென ஆகுதடா
சின்னப் பொறியே பெரும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே
சின்னப் பொறியே பெரும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே
அஞ்சி நின்ற பஞ்சப் படையே
கொஞ்சமது நெஞ்சு நிமிர்கையில்
எங்கள் மனம் பொங்கி அழுகையில்
குங்கும கங்கையும் கொஞ்சிடுமே
மலைகளும் சாய்ந்து போகுமோ

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன்னுதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா

அமுதக்கடல் உனக்குத் தான் - Amutha kadal unakku than lyrics

அமுதக்கடல் உனக்குத் தான்
ஆறா மழை உனக்குத் தான்
நீங்கா நிழல் உனக்குத் தான்
நீ கண்மணி எனக்குத் தானே
பொருந்திப் போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விருது தேரே வா



சந்திக்கா மலர் உனக்குத் தான்
கண்டிக்கா மொழி உனக்குத் தான்
சிந்திக்கா நொடி உனக்குத் தான்
சிரிக்கும் நதி உனக்குத் தானே
வழியும் எச்சில் வாயோரம்
எனது காயம் ஆறும்

என் தங்கம் முன்னாடி
என் காலக் கண்ணாடி
உன் ஆசை என்னாடி
நான் நடத்தி வைப்பேன்
வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில்
வா அழகுத் தேனே வா



பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பாத்து பாத்து
ஆயுள் கூடும் எனக்கு
புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாறிப்போச்சு கணக்கு

என் கூட பேசுற தூத்தோவா உனக்கு
நேருல காட்டட்டுவா
சில்லுக்கு புடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா
அந்த அருவிப் போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
நீ தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூறாக
என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விருது தேரே வா

எண்ணமே என் உன்னால - Enname en unnaala lyrics

எண்ணமே என் உன்னால
உள்ள பூந்தது தன்னால
கன்னமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளர
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சம் பூட்டி வச்சத
வந்து ஒடச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் நனைந்திடவா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோ மா



யாரும் பாத்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு குடுத்ததில்ல
நீயும் வந்து பாத்ததால பனியும் பத்திக்கிச்சே
கண் மறைச்சு போற புள்ள
முன் அழைச்சது யாருமில்ல
உன் மனசில் தான் விழுந்தேன் நானும் தங்கிடவே

எண்ணமே என் உன்னால
உள்ள பூந்தது தன்னால
கன்னமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளர
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சம் பூட்டி வச்சத
வந்து ஒடச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் நனைந்திடவா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோ மா

ஆராத்யா என் ஆராத்யா - Aaraadhya en aaraadhya tamil song lyrics

You are my sun shine
You are my moon light
You are star in the sky
Come with me now
You have my desire

வெண் தீயாய் வந்தாயா ஆராத்யா
கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா



காதோடு நான் சொன்ன
ஓர் சொல் உன் தோள் வீழ்ந்து 
உன் மார்பில் உடைகின்றதோ
மார்போடு நான் தந்த
ஓர் முத்தம் மேலேறி
மோட்சங்கள் அடைகின்றதோ
சொல்வாயா... 
செய்வாயா...
கொல்வாயா... 
உயிர் தந்து மீண்டும் கொல்வாயா

ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா



நாத்தீகன் நான் என்று
தெய்வங்கள் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அச்சங்கள் வீணென்று
பேயெல்லாம் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அஞ்சாதே... 
கொஞ்சாதே...
நீங்காதே... 
எந்நாளும் நீ என்னை நீங்காதே

நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா

கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

உனக்காக எல்லாம் உனக்காக - Unakkaaga ellaam unakkaaga lyrics

உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக
மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தை சொல்லிடு முடிவாக

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக



பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா
இல்லே பயித்தியமா பாடி ஆடி நடிக்கணுமா
பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா
இல்லே பயித்தியமா பாடி ஆடி நடிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமில்லாம கிடக்கணுமா

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக



இலங்கை நகரத்திலே இன்ப வள்ளி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன்
இலங்கை நகரத்திலே இன்ப வள்ளி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு மிதந்திடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு மிதந்திடுவேன்
இடி மின்னல் மழை புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக

வளர்ந்த கலை மறந்து விட்டாள் - Valarntha kalai maranthuvittaal lyrics

வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு 
ஏனடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு 
ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா



காதல் சொன்ன பெண்ணை இன்று
காணோமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று
காணோமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள்
ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறிவிட்டாள்
ஏனடா கண்ணா

காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா
அந்த காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா
அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்
ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன்
தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால்
முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா
அதை நீ பிறந்த பின்பு கூற
இயலுமா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா



இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா

அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள் தான்
கூறடா கண்ணா

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா - Mannavane alalaamaa kanneerai vidalaama lyrics

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க



கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்தும் பாராமல்
கலங்குவதும் வீணல்லவா
மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க



உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாய் தெரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாய் தெரியாதா
என் உடலில் ஆசை என்றால்
என்னை நீ மறந்துவிடு
என் உயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழ விடு
மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க