ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்
அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்
ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை
எழுதினாய்
அதை விழியில் கோர்த்து
உயிரின் உள்ளே
பார்வையாக்கி சொல்கிறாய்
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா
உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ
வேர்வைத் துளிகளும்
தீர்த்தம் போலே என்
மேலே படுகையில்
பாவம் அழியுதோ
இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன்
உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்ந்து வாழ்வோம்
அருகிலே
அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்
எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதலன் மடியிலே
நித்தம் நனைந்து கொள் இவள் உயிரிலே
கிளிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழையில்லை
அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்
என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்
நீ இரவல் உயிரா
இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா
No comments:
Post a Comment