வந்தாளப்பா வந்தாளப்பா - Vanthalappa Vanthalappa Lyrics

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ம்..ம்.. ம்..ம்...

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சொகமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ம்..ம்.. ம்..ம்...


மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டாலே
மறுபடியும் ஒரு வரம் தான்

மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டாலே
மறுபடியும் ஒரு வரம் தான்

வானவில் வளைஞ்சது போல
தலை குனிஞ்சு நின்னாளப்பா
வாழைமர தோரணத்தோட 
நாலு வைக்க சொன்னாளப்பா

அட ஊரோட ஒன்னாக சேர்ந்து
இப்போ ஊர்கோலம் போனாத்தான் ஆச்சு
பட்டு சேல கட்டி கெட்டி மேளம் கொட்டி
தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து பக்கத்துல நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா


கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன்
கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையில துணையிருப்பேன்
கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன்
கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையில துணையிருப்பேன்

தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா
தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா

நான் சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
நான் கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
தினம் காலை வரும் மாலை வரும்
ஆனா என்னப்போல பக்கத்துல நிக்காதப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சொகமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

No comments:

Post a Comment