நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - Nallavarkellam Satchigal Rendu Lyrics

நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் காட்சியம்மா
அது தான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா


நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றம் அன்றி
வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றம் அன்றி
வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது
நீங்கள் பேசுங்கள்
மனதுக்கு மனது கொஞ்சம்
தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா


ஆண்டவன் அரிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு 
ஆறுதல் இல்லை

ஆண்டவன் அரிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு 
ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் 
அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் 
விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம் 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் காட்சியம்மா
அது தான் உண்மைக்கு சாட்சியம்மா

No comments:

Post a Comment