மலையோரம் மயிலே விளையாடும் - Malayoram Mayile Vilayaadum Lyrics

மலையோரம்..... 
விளையாடும்..... 

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
ம்.. அப்பறம்..
விளையாட்ட சொல்லித்தந்த
ம்....
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே

பூமரக்காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனை தான்

பூமரக்காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனை தான்
மாநிறப் பூவே
யோசனை ஏனோ
மாமனத்தானே சேரணும் நீயே
ஆ.. ஆ... ஆ....


மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே

தந்தனனத்தன தந்தத்தந்த தானா தானா....
தகிட தக்கத்தக்கிட....


காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும்
ஆசையைத்தானே
கூறுது இங்கே
மாமலைத்தேனே

ஆ.. ஆ... ஆ....

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே

ஆசையிலே பாத்தி கட்டி - Aasaiyile Paathi Katti Lyrics

தென்பாண்டி சீம தெம்மாங்கு பாட்டு
பாட்டோட வாழும் என் சாமியே
ஒன் பேர போட்டு
நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் ஒன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானய்யா
என் வாக்கு நீ கேட்டு
காப்பாத்தய்யா

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி


வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்னப் பூ பாத்து
சேர்ந்ததே காத்து
சிந்து தான் பாடுது

பொன்னு மணித்தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி  என்னத்தேடி
நீ அங்க வந்து சேரு
வெதை போட்டேன் அது வெளஞ்சாச்சு
நீ வா என் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி


கண்ணு தான் தூங்கவில்ல
காரணம் தோணவில்ல
பொன்னு நான் ஜாதி முல்ல
பூமால ஆகவில்ல
கன்னி தான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்து தான் கூடவில்ல

கூரப்பட்டுச் சேல
நீ வாங்கி வரும் வேள
போடு ஒரு மால
நீ சொல்லு அந்த நாள
ஏன் சாமி நான் காத்திருக்கேன்
என்ன ஏந்து நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி

கருத்த மச்சான் கஞ்சத்தனம் - Karutha Machan Kanjathanam Lyrics

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பூட்டிவச்ச குதிரை ஒன்னு
புட்டுக்கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கிவைக்க
கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ள
மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு
பூட்டத் தொற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு
பந்தக்காலும் நீ போடு
ஒன் மார்பில் சாயாம
தூங்காது கண்ணு
என்னத்தான் புடிச்சு
மெல்லத்தான் அணைச்சு
முத்தந்தான் நித்தந்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்


முளைச்சு இங்கு மூணு இலை
விட்டவளும் நானே
என்ன கருகவச்சு பாக்குறியே
காஞ்ச நிலம் போல
நேத்து இங்கு சமஞ்சதெல்லாம்
புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா
சுட்ட சட்டி போல

எப்போதும் ஒன் நேசம்
மாறாது என் பாசம்
என் சேல மாராப்பு
நீதானே ராசா
என்னத்தான் புடிச்சு
மெல்லத்தான் அணைச்சு
முத்தந்தான் நித்தந்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்

தல கோதும் எளங்காத்து - Thalakothum Elangaathu Lyrics

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

ம் ம் ம் ம்.......

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ம் ம் ம் ம்.......

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 
கைசேரு.....


நீல வண்ணக் கூர இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகள மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோழில் நம்மை ஏந்திக் கொள்ளும்
நமக்கான நாள் வரும்

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 

கானக்கருங்குயிலே கச்சேரிக்கு - Kaanakarunguyile Kacheriku Vaa Vaa Lyrics

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா


தேனும் பாலும்
வீம்பா போச்சு 
ஒன்ன பாத்த நாளு
தூர நின்னே
நீதான் என்ன
தூண்டி போட்ட ஆளு

மாடி வீட்டு மானா
கூர வீட்டில் வாழும்
வீடு வாசல் யாவும்
நீதான் எந்த நாளும்

மானம் காக்கும் சேல போலே
மாமன் வந்து மாலை போடும் நாளே
வெட்கம் ஏறும் மேலே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா


சோளக்கதிரு ஒன்னு
சேல கட்டி ஆடும்
நீலக்குருவி வந்து
மாலை கட்டி போடும்

மாமன் மனசுக்குள்ளே
மொட்டு விட்டேன் நான் தான்
வாலே வயசுப்புள்ளே
வார்த்தை எல்லாம் தேன் தான்

பாசம் பந்தம் எங்கே போகும்
போனால் தீயாய் தேகம் வேகும்
தீராதம்மா மோகும்

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் - Meenamma Athikaalaiyilum Anthi Maalaiyilum Lyrics

மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

அம்மம்மா
முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம்
ஒரு காவியமே

சின்ன சின்ன ஊடல்களும்
சின்ன சின்ன மோதல்களும்
மின்னல் போல
வந்து வந்து போகும்

ஊடல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும்
காயம் இன்றி வாழும்

இது மாதங்கள் நாட்கள் செல்ல.. ஆ...
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல.. ஆ...

மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே


ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல்
இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு
தென்றல் எட்டிப் பார்ப்பதற்கும்
அதை மூடாமல்
தாழ் போடாமல்
எனை தொட்டுத் தீண்டுவதா

மாமன் காரன் தானே
மாலை போட்ட தாலே
மோகம் தீரவே
மெதுவாய் மெதுவாய்
தொடலாம்

மீனம்மா
மழை உனை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா
குளிர் காய்ச்சல் வரும்

அம்மம்மா
வெயில் உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா
உடல் வேர்த்து விடும்


அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும்
நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

அன்று பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே
சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஜாதி மல்லி பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே 
பேசலாம் முதல் நாள் இரவு

து.. து.. து...

மீனம்மா
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

அம்மம்மா
உன்னைக் காதலித்து
புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு


உன்னைத் தொட்ட
தென்றல் வந்து
என்னைத் தொட்டு
என்னென்னவோ
சங்கதிகள் சொல்லிவிட்டு போக

உன் மனமும்
என் மனமும்
ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

பின்பு மோகனப் பாட்டெடுத்தோம்..ஆ...
முழு மூச்சுடன் காதலித்தோம்.. ஆ...

மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

இளமை எனும் பூங்காற்று - Ilamai Enum Poongaatru Lyrics

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்


தன்னை மறந்து 
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமை எனும் பூங்காற்று

அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

இளமை எனும் பூங்காற்று

மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலை தான்
என்ன விதியோ


இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - Kalyaana Ponnu Kannaana Kannu Lyrics

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க
வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தாதை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்

அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தாதை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மவ ரத்தினத்தின்
அச்சடித்த சித்திரத்தின்
கையோடு வரும் வளையல்
ஆ..ஆ...ஆ...ஆ....

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


பெண்டாட்டி புருஷன்
ரெண்டாக இருந்தால்
மூணாக செய்யும் வளையல்
இது ஒட்டாத மனசில்
கிட்டாத சுகத்தை
கட்டாயம் தரும் வளையல்
மாமியார மாமனார
சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சு தந்த வளையல்
இளங்காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல்

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


தள்ளாடும் கிழவிக்கு
இல்லாத அழகை
தானாக தரும் வளையல்
யாரும் பாக்காத முகத்தை
கேக்காத சுகத்தை
தேனாக தரும் வளையல்
கைகளிலே ஓசை வர
கண்களிலே ஆசை வர
பெண்ணோடு வரும் வளையல்
அவ முன்னழகை சொல்லிக் கொண்டு
பின்னழகை அள்ளிக் கொண்டு
பின்னோடு வரும் வளையல்

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - Ninaipathellaam Nadanthuvittaal Lyrics

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை


ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை


எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை
இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை
இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை

ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தான - Aathoram Thoppukulla Athana Lyrics

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்

ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்

கனகாம்பரம் எடுத்து
கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட
ஆச வச்சேன்

மரியாதை இல்லாம
மச்சான உன்னப் பேசி
மாரோட மல்லு கட்ட
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா


மாரளவு தண்ணியில
மஞ்சத்தேச்சு நான் குளிக்க
மறைஞ்சிறுந்து நீயும் பாக்க
ஆச வச்சேன்

பசுவப்போல மெல்ல வந்து
கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்புப் பண்ண வேணுமுன்னு
ஆச வச்சேன்

உன்னோடு சந்தையில
எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித் தர
ஆச வச்சேன்

குத்தாத முள்ளு குத்தி
குதிகாலு வலிக்குதுன்னு
மடிமேல காலப் போட
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்

ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்


மேகாட்டு மூலையிலே
மேகம் கருக்கையிலே
சுக்கு தண்ணி வச்சுத் தர
ஆச வச்சேன்

மச்சம் குளிருகிற
மார்கழி மாசத்துல
மச்சானத் தொட்டுத் தூங்க
ஆச வச்சேன்

மாமன் கட்டும் வேட்டியிலே
மஞ்சக்கற என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல
ஆச வச்சேன்

ரித்திகுளம் ஆசாரிக்கு
கொட்டியிலே பணம் குடுத்து
ரெட்டத் தொட்டில் செய்யச் சொல்ல
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா


அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக் கயிறு கட்ட
ஆச வச்சேன்

நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ண தேச்சு விட
ஆச வச்சேன்

வெந்நீரு கொதிக்க வச்சு
மச்சான குளிக்க வச்சு
மாராப்பு நனையத் தானே
ஆச வச்சேன்

மாந்தோப்பில் கட்டிலிட்டு
மனம் போல தொட்டு தொட்டு
மாமன் கூட பேசிடத் தான்
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்

ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்

வா வா எந்தன் நிலவே - Vaa Vaa Nilave Vennilave Lyrics

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே


காணும் கனவெல்லாம்
என்றும் நீதானே
என் கனவெல்லாம் நினைவாக
வா வா கண்மணியே
வீசும் காற்றில்
தூசாய் ஆனேனே
உனை எங்கோ மனம் பேச
உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும்
திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் ஏழேழும்
நாம் வாழ்வதைத் தடுத்திட முடியாது

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே


காதல் பிரிவென்றால்
உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே
உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும்
என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள்
கண்ணீர் வடிக்கிறதே
உன்னோடு நானும்
நிழலாக வருவேனே
உடலோடு உயிராக
நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாதே

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே

சின்னத் தங்கம் எந்தன் செல்லத் தங்கம் - Chinna Thangam Enthan Chella Lyrics

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும் 
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால் 
எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது


குமரி நீயும் குழந்தையடி
மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்ன பாக்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால்
உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே
சோகமெங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க
உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது


மனசுக்கேத்த மாப்பிள்ளய
ஒம்மனசு போல மணம் முடிப்பேன்
சீமந்தமும் நடத்தி வப்பேன்
ஒன் குழந்தைகள நான் சுமப்பேன்
பதினாறுகளும் 
பெற்று நீ வாழணும்
அத பாத்து நான்
தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும்
உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும் 
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால் 
எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது

நினைக்கத் தெரிந்த மனமே - Ninaika Therintha Maname Lyrics

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

மயங்கத் தெரிந்த கண்ணே
உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே
உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா


எடுக்கத் தெரிந்த கரமே
உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே
உனக்கு கசக்கத் தெரியாதா

படிக்கத் தெரிந்த இதழே
உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா


கொதிக்கத் தெரிந்த நிலவே
உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்கத் தெரியாதா

பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

அவள் பறந்து போனாளே - Aval Paranthu Ponaale Lyrics

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

சந்திரா.........

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
இனி நிழலுக்கும் உறக்கமில்லை
என் நிழலுக்கும் உறக்கமில்லை

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே


இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்த கூட்டுக்கு குயிலில்லை
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்த கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டி வைத்தேன்
அதில் எனையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே


அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துக் கொண்டாள்

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

உயிரும் நீயே உடலும் நீயே - Uyirum Neeye Udalum Neeye Lyrics

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
உயிரும் நீயே என் உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே
உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே

உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே


விண்ணை படைத்தான்
மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
விண்ணை படைத்தான்
மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதியில்லை
பூமிக்கு அதனால் நிம்மதியில்லை
சாமி தவித்தான்
சாமி தவித்தான்
தாயை படைத்தான்

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே
உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே

உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

கண்டா வரச் சொல்லுங்க - Kandaa Vara Sollunga Lyrics

சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல

பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளர்ந்த புள்ள

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க


அம்மாடி ஆலமரம்
மரத்து மேல உச்சி கெள
அம்மாடி ஆலமரம்
மரத்து மேல உச்சி கெள
ஒத்த கிளி நின்னா கூட
கத்தும் பாரு அவன் பேர

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க


ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடம் கூட இல்லையப்பா
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க


கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூட இல்ல
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்ட போட்ட எவனும் இல்ல
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்ட போட்ட எவனும் இல்ல

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

இதுவும் கடந்து போகும் - Ithuvum Kadanthu Pogum Lyrics

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

சுடரி இருளில் ஏங்காதே
வெளிதான் கதவை மூடாதே
அட ஆறு காலங்களும்
மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை
ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே

மழை காற்றோடு போகும் வரை
போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை
ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
எதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும்
அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்
அதுபோல் இந்த கவலையே

நாள்தோறும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும் வரை
போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை
ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

அதுவாய் விழுந்தே 
அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே
உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே

வாசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறிச் சென்று உறவாடுமே

சுடரி சுடரி 
வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தால்
பயணம் தீராதே

அழகே சுடரி
அட ஏங்காதே
மலரின் நினைவில்
மனம் வாழாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
கடந்து போகும்
கடந்து போகும்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - Kuruku Valiyil Valvu Thedidum Lyrics

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை
மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும்
சண்டை ஓயாத
முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை
வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
விளையும் பயிரை
வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகள் ஆடும்
பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்து
புரட்டும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே
ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல்
குறுகிப் போகும்
கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

நிலை மாறும் உலகில் - Nilai Maarum Ulagil Lyrics

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்


தினந்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
தினந்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்
புது வாழ்வுக்கிங்கே நினைவு

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம்
அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

லலலால லலலா.. ம்..ம்..ம்..

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - Nallavarkellam Satchigal Rendu Lyrics

நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் காட்சியம்மா
அது தான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா


நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றம் அன்றி
வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றம் அன்றி
வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது
நீங்கள் பேசுங்கள்
மனதுக்கு மனது கொஞ்சம்
தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா


ஆண்டவன் அரிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு 
ஆறுதல் இல்லை

ஆண்டவன் அரிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு 
ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் 
அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் 
விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம் 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் காட்சியம்மா
அது தான் உண்மைக்கு சாட்சியம்மா

அடி பெண்ணே ஒரு முறை - Adi Penne Oru Murai Lyrics

அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்

அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்

ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை
எழுதினாய்

அதை விழியில் கோர்த்து
உயிரின் உள்ளே
பார்வையாக்கி சொல்கிறாய்


உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ

வேர்வைத் துளிகளும்
தீர்த்தம் போலே என்
மேலே படுகையில்
பாவம் அழியுதோ

இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன்
உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்ந்து வாழ்வோம்
அருகிலே


அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்

எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ


மழையில் காதலன் மடியிலே
நித்தம் நனைந்து கொள் இவள் உயிரிலே
கிளிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழையில்லை

அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்

என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்


நீ இரவல் உயிரா
இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

எந்தன் நண்பியே நண்பியே - Enthan Nanbiye Nanbiye Lyrics

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

பப்பா.. பபபா... பா....

எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
என்னை என்னைப் போலே
ஏற்றுக் கொண்டதாலே
எதிரொலி ஆகிடுவாயே

கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆகிட வந்தாயே
சண்டைகள் போடவும்
பின்வந்து கூடவும்
ஆயிரம் காரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே
நீ தூரிகையே


எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேட்க
கிடைத்த ஒரு உயிர்த் துணை நீயே
என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே

எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யாரிந்த நானென சொன்னாயே
செவ்வானம் நானே
நீ அவந்திகையே

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே

எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

மெய் நிகராட்டங்கள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்க்களம் மீது
எந்தன் படை ஒன்றில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்

இணைய தொடரை 
இணைந்தே இனி காண்போமே
அழுதால் உடனே நீ துடைப்பாய்

மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும் நீ முடிப்பாய்


நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதயச் சுவரில் 
இறைவன் வரையும்
குறுநகையே

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

நீ பாதி நான் பாதி கண்ணே - Nee Paathi Naan Paathi Lyrics

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே


வானப் பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப் பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப் பாடல்

மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தம் இருக்கும் உன்னாலே

மெல்லச் சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித் தெளிக்கும் முன்னாலே

மெய்யானது உயிர் மெய்யாகவே
தடை ஏது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே


இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

சொர்க்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில்
பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான்
அன்பே வா

சுமையானது ஒரு சுகமானது
சுவை நீ தான்

நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

குக்கூ குக்கூ தாத்தா தாத்தா - Kukoo Kukoo Thatha Lyrics

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன்கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அல்லி மலர் கொடி அங்கதமே
ஒட்டார ஒட்டார சந்தனமே
முல்ல மலர் கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா
வெத்தல மடையம்மா
சுமந்த கையம்மா
மத்தளம் கொட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதிய கூறேன்டி
கண்ணாடிய காணான்டி
இந்தார்ரா பேராண்டி


அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி
நல்லபடி வாழச் சொல்லி 
இந்த மண்ண கொடுத்தானே பூர்வக்குடி

கம்மாங்கர காணியெல்லாம்
பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்குந்தான்
இந்த ஏரிக்குளம் கூட சொந்தமடி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பன யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு


பாடு பட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வ தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா
ஆதாட்டி கருப்பட்டி 
ஊதாங்கோலு மண்ணுச்சட்டி
ஆத்தாரோம் கூடு கட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
ஜஞ்ஜன ஜனக்கு ஜன
மக்களே ஏய் ஏய்
உப்புக்கு சப்பு கொட்டு
முட்டைக்குள்ள சட்டு கொட்டு
அடங்கி ரத்தம் கொட்டு
கிட்டிப் புல்லு விட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்ட அடையலயே

கடலே கரையே
வனமே சனமே
நெலமே கொலமே
எடமே தடமே

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி


பாட்டன் பூட்டேன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா
சேவக்கூவிச்சு
அது போட்டு வச்ச
எச்சந்தானே காடா மாறிச்சு
நம்ம நாடா மாறிச்சு
இந்த வீடா மாறிச்சு

என்ன கொற என்ன கொற
என் ஈலிக்கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்லப் பேராண்டிக்கு என்ன கொற

பந்தலுல  பாவக்கா
பந்தலுல பாவக்கா
வெதக்கல்லு விட்டுருக்கு
அது வெதக்கல்லு விட்டுருக்கு

அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க
 
ஆ.... ஆ... ஆ... ஆ...

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி


என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

கடலே கரையே
வனமே சனமே
நெலமே கொலமே
எடமே தடமே

குக்கூ குக்கூ...

முழுசா ஒனக்கென நான் வாழுறேன் - Mulusa Onakena Naan Vaaluren Lyrics

முழுசா ஒனக்கென
நான் வாழுறேன்
புதுசா தெனம் தெனம்
எனை பாக்குறேன்

அழுதா தோளுல
நான் சாஞ்சிப்பேன்
அளவில்லாம
ஆசை வைக்குறேன்

ஏனோ தானோ
என்று போல நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே

யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
ஒனதருகில்
காதல் ஒன்று 
கண்டேன் பெண்ணே


லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
ஒன் ஒதட்டுல ஒறையுறேன்

வாழ்க்கை வாழதான்
உன்னோடு இருக்கிறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்

கண்ண வீசி
கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கன்னம் ரெண்டும் 
முத்தம் கேக்குதே 

மலர்களே மலர்களே இது என்ன - Malargale Malargale Ithu Enna Lyrics

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா...

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா... 


மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயது என்னை
மறந்து போவது தான் முறையா

நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரைச் சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் 
என் வாழ்வே வா..

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா... 


பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறை தானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே
இழைந்து கொண்டது இந்த உறவே

உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போலே
உறைந்து போனது தான் உறவே

மறக்காது உன் தாகம்
மரிக்காது உன் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா..

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா...