சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் - Sonnaalum Vetkamadaa Sollaavaittaal Lyrics

சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...

சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா

பொன்னோடு பொருள் படைத்தேன்
பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன்
பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல்
மாளிகையில் வாழுகிறேன்
சொன்னாலும் வெட்கமடா



பாய் விரித்து படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்து படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும்
நெஞ்சில் ஓர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும்
நெஞ்சில் ஓர் அமைதியில்லை
கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்
கொடும் பாம்பாய் மாறுதடா
கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்
கொடும் பாம்பாய் மாறுதடா
கொத்திவிட்டு புத்தனைப் போல்
சத்தியமாய் வாழுதடா
இல்லாத மனிதருக்கு 
இல்லை எனும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே
உள்ளதெல்லாம் தொல்லையடா
சொன்னாலும் வெட்கமடா



அன்னம் இல்லை என்றாலும்
அமைதி கொண்ட மானிடனே
அன்னம் இல்லை என்றாலும்
அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே
என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே
என் மனது தவிக்குதடா
வண்ண முத்து மண்டபமும்
வைர நகை பஞ்சணையும்
வண்ண முத்து மண்டபமும்
வைர நகை பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன்
நிம்மதியை நீ தருவாய்

சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா

சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா

வாராரு வாராரு அழகர் வாராரு - Vaaraaru Vaaraaru Alagar Vaaraaru Lyrics

வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
ஒலகம் காக்க வாறாரு
உள்ள கிரகம் தீர்க்க போறாரு
வெட்ட வெளி பொட்டலிலே
சாதி சனம் கூட்டியே
பொட்டழகும் கண்ணழகும் 
கட்டழகும் காட்டியே

வாராரு வாராரு அழகர் வாராரு



ஆகாயம் பூமியெல்லாம்
ஆட்டி வச்சவர் அழகரு
ஐம்பூதம் பிரிஞ்சிரிந்தத
கூட்டி வச்சவர் அழகரு
சமயங்களில் வேற்றுமையை
பூட்டி வச்சவர் அழகரு
சமயம் வந்தா சக்கரத்த
தீட்டி வச்சவர் அழகரு
முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலயே
வந்தது வந்தது கோடி சனம்
நம்ம வைகை நதிக்கரை பத்தலயே

வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு



சாமி கண்டதும் பாதி சனங்க
சாமி ஏறி ஆடுதே
சாதி சனங்க கோடி சனங்க
சாதி மறந்து கூடுதே
உச்சி அழக பாத்த பிறகு
உச்சந்தலையில் ஏறுதே
ஆமா.. சண்ட மறந்து
சத்தம் மறந்து சச்சரவுக தீறுதே
நெஞ்சில் எறங்குன சாமியடி
இது ஏழைங்க பக்கமே நிக்குமடி
நன்மையடி பின்ன நன்மையடி
இனி நாடு முழுக்க நன்மையடி
கொட்டா போடட்டும் தாளமடி
நம்ம வெற்றிக்கு 
என்னைக்கும் வெற்றியடி
கொட்டா கொட்டுன்னு
கொட்டுமடி செல்வம்
கூரையைப் பிரிச்சு கொட்டுமடி

வந்தோம் திரண்டு
வந்தோம் மதுரை
வந்தோம் அழகர் வாழியவே
கண்டோம் அழகர்
கண்டோம் மகிழ்வு
கொண்டோம் மதுரை வாழியவே
கொண்டோம் உணர்ச்சி
கொண்டோம் எழுச்சி
கொண்டோம் இதயம் வாழியவே
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தத்தோம் பாடி ஆடுகவே
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தத்தோம் பாடி ஆடுகவே

பொன் எழில் பூத்தது புது வானில் - Ponnelil Poothathu Puthu Vaanil Lyrics

பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்
பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்
என் மனத்தோட்டத்து
வண்ணப்பறவை
சென்றது எங்கே
சொல் சொல் சொல் 

பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்

தென்னை வனத்தினில்
உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன்
வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன்
வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட
பாடுகிறேன்

பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்



முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சக்கரை 
அள்ளிக்கொடுத்த 
பொன் மாடம் எங்கே
அள்ளிக்கொடுத்த 
பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட
செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி
மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா
பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா
உன் மனத்தோட்டத்து
வண்ணப்பறவை
வந்தது இங்கே
வா வா வா..
பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா

தென்னவன் மன்றத்து
செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு
பாடிக்கொண்டு
வந்தது பொன் வண்டு
பாடிக்கொண்டு
மன்னவன் உள்ளத்தின்
சொந்தம் வந்தாள் என்று
சென்றது பூந்தென்றல்
ஆடிக்கொண்டு

பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா



என் உடல் என்பது
உன் உடல் என்ற பின்
என்னிடம் கோபம்
கொள்ளுவதோ
என்னிடம் கோபம்
கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னை தந்தான பின்
உன்னிடம் நானென்ன
சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா
உன் மனத்தோட்டத்து
வண்ணப்பறவை
வந்தது இங்கே
வா வா வா..

ஆ..ஆ...ஆ...ஆ...
ஆ..ஆ...ஆ...ஆ...

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - Oruthi Oruvanai Ninaithu Vittaal Lyrics

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...
அந்த ஒருவன் ஒருத்தியை
மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயரென்ன
குடும்பம்...
நினைத்தவன் அவளை
மறந்துவிட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன
துயரம்...
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அந்த பெண்மையின் நிலையென்ன
மௌனம்....

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...

இரவும் பகலும் உண்ணுருவம்
அதில் இங்கும் அங்கும்
உன் உருவம்
இரவும் பகலும் உண்ணுருவம்
அதில் இங்கும் அங்கும்
உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும்
என் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும்
என் உருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன்
நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன்
நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும்
நான் இல்லை
உனை நெருங்கும் தகுதியும்
எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
எனை கேலி செய்தால்
மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
எனை கேலி செய்தால்
மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது 
என் கடமை
அதில் வழியை காண்பது
உன் திறமை
வாதம் செய்வது 
என் கடமை
அதில் வழியை காண்பது
உன் திறமை
கண்டேன் கண்டது
நல்ல வழி
அது காதலனுடனே
செல்லும் வழி
கண்டேன் கண்டது
நல்ல வழி
அது காதலனுடனே
செல்லும் வழி
சொன்னேன் பல முறை
யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும்
யோசிக்கிறேன்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் - Punnagai Mannan Poovili Kannan Lyrics

நவராத்திரியின் கொலுமண்டபத்தில்
இவள் பாடலிலே
ஒரு கேள்வி பிறக்கும்
நவராத்திரியின் கொலுமண்டபத்தில்
இவள் பாடலிலே
பதில் மறைந்திருக்கும்

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே
அவன் ஒருவனுக்காக

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே
அவன் ஒருவனுக்காக

தேவன் முருகன்
கோவில் கொண்டது
வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை
என்றொரு பூவையை
மணந்தது திருப்பரங்குன்றத்திலே
தேவன் முருகன்
கோவில் கொண்டது
வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை
என்றொரு பூவையை
மணந்தது திருப்பரங்குன்றத்திலே

மாலையிட்டால் அது
ஓர் முறைதான் என
நினைப்பது பெண்மையன்றோ
ஒரு மாலையை
இரு தோளுக்கு சூடுதல்
இறைவன் தன்மையன்றோ
அது ஏட்டில் உள்ள கதை
இது இன்றும் தொடரும் கதை
அது பொம்மைக் கல்யாணம்
இது உண்மைக் கல்யாணம்

ஏன் பாட்ட நிருத்திட்டீங்க... பாடுங்க...

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

கொஞ்சும் கணவன்
குங்குமம் வைப்பது
ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன்
சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
கொஞ்சும் கணவன்
குங்குமம் வைப்பது
ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன்
சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
ஈருயிர் என்றும் 
ஓருடல் தன்னில்
இருந்திட வழியுண்டோ
ஒரு முகத்துக்கு
இரண்டு விழிகளை
வைத்த இயற்கையில் தவறுண்டோ
இந்த கேள்விக்கு பதிலேது
சிலர் வாழ்வுக்கு பொருளேது
அது உறவின் மாறாட்டம்
இது உரிமைப் போராட்டம்

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே
அவன் ஒருவனுக்காக

ராம நாமம் ஒரு வேதமே - Rama Naamam Oru Vedame Lyrics

ம்.. பாடு..
ச...
சரிகமபா...சரிகமபா...
பதமபா.. பதமபா...
பதமபதநிசா.. பதமபதநிசா.. 
ஆஹா....
சநிதபமகரிசா.. 

ராம நாமம் ஒரு வேதமே
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்

அருள்மிகு
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

அவன் தான் நாரணன் அவதாரம்.. 
ஓ.. ஓ. ஆ...ஆ..
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன் தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான்
கௌதமன் நாயகி சாபம் தீர்த்தான்
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே


ஆ.. ஆ...ஆ...
ஓர் நவமி அதில்
நிலமெலாம் துலர
நினைவெலாம் மலரவே
உலகு புகழ் தாய் 
மடியில் ஒரு
மழலையாய் உதிக்க
மறையெலாம் துதிக்கவே
தயரதனின் வம்சத்தில்
பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகன் மகள்
வைதேகி பூச்சுட
வைபோகம் கொண்டாட
திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும்
மறவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை
துறந்தவனாம்
இனியவள் உடன்வர
இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிட
துணிந்தவனாம்
ஸ்ரீராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும்
நெஞ்சே மனம் இனிக்க
தினம் இசைக்க
குலம் செழிக்கும்
நிதம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனை பூமாலை
இதை விட ஆனந்தம்
வாழ்வில் ஏது
இசைத்தேன் நாமமே
நாளும் ஓது

ராம நாமம் ஒரு வேதமே
சநிதமப
ராம நாமம் ஒரு வேதமே
சபமகரி சநிதபம சரிகமத
ராம நாமம் ஒரு வேதமே
பதபாபபா நிதபாபபா சநிதபாபபா
கமதபாச கமபதநிசா 
சாச சாிசா நிசரிசநி
சசரிரி சசகரி சநிசரி சநிதா

சரிகம பமகரி ரிகமப பமகரிக
சகரிநி தநிதநி ததமம கரிசநி
சரிசக சமசம தசசநி தசசரி
சரிகமப கபமகரி சநிதமப

ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள்மிகு
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

முன் பனியா முதல் மழையா - Mun Paniyaa Muthal Mazhaiya Lyrics

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே.. ஹோய்..

மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனச தெறந்து சொல்லடி வெளியே
கரைய கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனச தெறந்து சொல்லடி வெளிய...


என் இதயத்தை
என் இதயத்தை
வழியில் எங்கேயோ
மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்
உன் விழியினில்
அதனை இப்போது
கண்டு பிடித்துவிட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..ஓ...
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே.. 

சலங்க குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து துள்ளுவதெதுக்கு
நெலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ.. ஓ...


என் பாதைகள்
என் பாதைகள்
உனது வழி பார்த்து
வந்து முடியுதடி
என் இரவுகள்
என் இரவுகள்
உனது முகம் பார்த்து
விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும்
மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை
நீ ஊற்றிவிட்டாய்
மூழ்கினேன் நான் கண்ணிலே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..ஏ...

எனை காணவில்லையே நேற்றோடு - Enai Kaanavillaye Netrodu Lyrics

அன்பே.. அன்பே.. அன்பே.. அன்பே.. 
எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே.. அன்பே.. 
நடை போடும் பூங்காற்றே.. பூங்காற்றே..
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 


ஆகாரம் இல்லாமல்
நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல்
தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நானென்று சொன்னாலே
நானல்ல நீ தான்
நீயின்றி வாழ்ந்தாலே
நீர் கூட தீ தான்
உன் சுவாசக் காற்றில்
வாழ்வேன் நான்

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே.. அன்பே.. 


நிமிஷங்கள் ஒவ்வொன்றும்
வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும்
நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே.. அன்பே.. 
நடை போடும் பூங்காற்றே.. பூங்காற்றே..
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்
எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 

மலையோரம் வீசும் காத்து - Malayoram Veesum Kaathu Lyrics

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா


வான் பறந்த தேன் சிட்டு
நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ
கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா
உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா
தொட ஆகாதா ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும்
வானம் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா


குத்தாலத்து தேனருவி
சித்தாட தான் கட்டாதா
சித்தாடைய கட்டியே
கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல்
பூங்காத்தோடு ஆட
ஆவாரம்பூவில் அது
தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் 
இந்த ஜீவன் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

வானுயர்ந்த சோலையிலே - Vaanuyarntha Solayile Lyrics

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த சோலையிலே...


வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழாத நாள் இதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழாத நாள் இதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாக பேசியதும்
சிரித்து விளையாடியதும்
தேனாக பேசியதும்
சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகும் என்று
யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே...


ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு
வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு
வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து
பூங்குழலில் சூடிவைத்து
பூத்திருந்த மலரெடுத்து
பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம்
பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே...

தேவனே என்னைப் பாருங்கள் - Devane Ennai Paarungal Lyrics

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர்
மன்னித்தருள்வீர்

ஓ.. மை லார்ட்.. பார்டன் மி

உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில்
போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே


தாய் மடியிலே
மழலைகள் ஊமையோ
கேள் உறவிலும் 
நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா 
மனதிலா தேவனே
நான் அழுவதா
சிரிப்பதா கர்த்தரே.. ஓ..

மான்களும் சொந்தம் தேடுமே 
இம்மானிடன் செய்த
பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே
உன் பாதையில்
பிள்ளைப் பாசமில்லையோ

செல்வங்கள் குவிந்தது
மாளிகை வந்தது
சேவை புரிந்திட
சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட
நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
நோ.. பீஸ் ஆஃப் மைண்ட்

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்


கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி.. ஓ..
ஓ.. லார்ட்.. ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்..

கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்

முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடிப்பது சிலுவை அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - Kannan Vanthaan Ange Kannan Vanthaan Lyrics

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்.. ஆ.. 

தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
கேட்டவர்க்கு கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறி
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்..ஆ..


முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் 
சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும்
சன்னிதானம்
சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்...


கண்ணா... கண்ணா.. கண்ணா...
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி
காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி
காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்து
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும்
அதை கேட்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்து
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும்
அதை கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கண்ணா..கண்ணா..கண்ணா..கண்ணா..

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா - Ketathum Kodupavane Krishna Krishna Lyrics

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே
கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே
கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே
கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தை தேடி நின்றோம்
கிருஷ்ணா கிருஷ்ணா

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே


தாயிடம் வாழ்ந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய்
கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய்
கிருஷ்ணா 
அதை உலகத்தில் வாழ விடு
கிருஷ்ணா கிருஷ்ணா
உலகத்தில் வாழ விடு

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா


நீயுள்ள சந்நிதியே
கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே
கிருஷ்ணா கிருஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய்
கிருஷ்ணா கிருஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய்
கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா... ஆ...
கிருஷ்ணா... ஆ...
கிருஷ்ணா கிருஷ்ணா 
கிருஷ்ணா கிருஷ்ணா 


எண்ணை இல்லாதொரு
தீபம் எரிந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது
உருகி இருந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமை
காவல் புரிந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி 
எண்ணி இருந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா ஆ...
கிருஷ்ணா ஆ...

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா

ஓர் ஆயிரம் பார்வையிலே - Or Ayiram Paarvaiyile Lyrics

நூறு முறை பிறந்தாலும்
நூறு முறை இறந்தாலும்
உனை பிரிந்து வெகு தூரம் நான் 
ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒரு நாளும் மறைவதில்லை

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்


இந்த மானிடர் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்


இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

எல்லோரும் நலம் வாழ நான் - Ellorum Nalam Vaala Naan Lyrics

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


பூப்போன்ற என் உள்ளம்
யார் கண்டது
பொல்லாத மனம் என்று
பேர் வந்தது
பூப்போன்ற என் உள்ளம்
யார் கண்டது
பொல்லாத மனம் என்று
பேர் வந்தது
வழியில்லாத ஏழை
எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு
பகை ஆனது

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும்
தடை போடுவேன்
கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும்
தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக
நாள் ஆகலாம்
நான் யாரென்று
அப்போது நீ காணலாம்

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


உன் பார்வை
என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம்
எதுவென்று தெரிகின்றது
உன் பார்வை
என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம்
எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை
மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில்
நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு
நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு
நான் போகலாம்
உன் பாதை நீ கண்டு
நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு
நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும்
சுகம் ஆகலாம்
நான் எப்போதும் நீ வாழ
இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

வானம் தொட்டு போனான் - Vaanam Thottu Ponaan Lyrics

வானம் தொட்டு போனான்... ஆ..ஆ...
மானமுள்ள சாமி.. ஹோய்..
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
தேம்புதய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே
ஊருசனம் தான்
தத்தளிச்சு வாடுதய்யா
ஏழை இனம் தான்

போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே


வெட்டருவா தாங்கி...ஓ..ஓ...
வீசுகிற ஊரில்...ஓ..ஓ...
வெட்டருவா தாங்கி
வீசுகிற ஊரில்...
வெள்ளக் கொடி தூக்கி
வந்தவனும் நீயே
நல்ல வழி நீதான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவனத் தானே
சூழந்ததின்று பாவம்
கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போன பின்னே
வெள்ளி முளைக்கும்

போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
தெற்கு திசை ஆண்ட
மன்னரினம் தான்
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான்..ஓ..
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே