பொன் எழில் பூத்தது புது வானில் - Ponnelil Poothathu Puthu Vaanil Lyrics

பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்
பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்
என் மனத்தோட்டத்து
வண்ணப்பறவை
சென்றது எங்கே
சொல் சொல் சொல் 

பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்

தென்னை வனத்தினில்
உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன்
வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன்
வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட
பாடுகிறேன்

பொன் எழில் பூத்தது
புது வானில்
வெண்பனி தூவும் 
நிலவே நில்



முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சக்கரை 
அள்ளிக்கொடுத்த 
பொன் மாடம் எங்கே
அள்ளிக்கொடுத்த 
பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட
செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி
மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா
பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா
உன் மனத்தோட்டத்து
வண்ணப்பறவை
வந்தது இங்கே
வா வா வா..
பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா

தென்னவன் மன்றத்து
செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு
பாடிக்கொண்டு
வந்தது பொன் வண்டு
பாடிக்கொண்டு
மன்னவன் உள்ளத்தின்
சொந்தம் வந்தாள் என்று
சென்றது பூந்தென்றல்
ஆடிக்கொண்டு

பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா



என் உடல் என்பது
உன் உடல் என்ற பின்
என்னிடம் கோபம்
கொள்ளுவதோ
என்னிடம் கோபம்
கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னை தந்தான பின்
உன்னிடம் நானென்ன
சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது
தலைவா வா
வெண்பனி தூவும்
இறைவா வா
உன் மனத்தோட்டத்து
வண்ணப்பறவை
வந்தது இங்கே
வா வா வா..

ஆ..ஆ...ஆ...ஆ...
ஆ..ஆ...ஆ...ஆ...

No comments:

Post a Comment