மலையோரம் வீசும் காத்து - Malayoram Veesum Kaathu Lyrics

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா


வான் பறந்த தேன் சிட்டு
நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ
கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா
உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா
தொட ஆகாதா ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும்
வானம் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா


குத்தாலத்து தேனருவி
சித்தாட தான் கட்டாதா
சித்தாடைய கட்டியே
கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல்
பூங்காத்தோடு ஆட
ஆவாரம்பூவில் அது
தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் 
இந்த ஜீவன் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

No comments:

Post a Comment