புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் - Punnagai Mannan Poovili Kannan Lyrics

நவராத்திரியின் கொலுமண்டபத்தில்
இவள் பாடலிலே
ஒரு கேள்வி பிறக்கும்
நவராத்திரியின் கொலுமண்டபத்தில்
இவள் பாடலிலே
பதில் மறைந்திருக்கும்

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே
அவன் ஒருவனுக்காக

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே
அவன் ஒருவனுக்காக

தேவன் முருகன்
கோவில் கொண்டது
வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை
என்றொரு பூவையை
மணந்தது திருப்பரங்குன்றத்திலே
தேவன் முருகன்
கோவில் கொண்டது
வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை
என்றொரு பூவையை
மணந்தது திருப்பரங்குன்றத்திலே

மாலையிட்டால் அது
ஓர் முறைதான் என
நினைப்பது பெண்மையன்றோ
ஒரு மாலையை
இரு தோளுக்கு சூடுதல்
இறைவன் தன்மையன்றோ
அது ஏட்டில் உள்ள கதை
இது இன்றும் தொடரும் கதை
அது பொம்மைக் கல்யாணம்
இது உண்மைக் கல்யாணம்

ஏன் பாட்ட நிருத்திட்டீங்க... பாடுங்க...

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

கொஞ்சும் கணவன்
குங்குமம் வைப்பது
ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன்
சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
கொஞ்சும் கணவன்
குங்குமம் வைப்பது
ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன்
சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
ஈருயிர் என்றும் 
ஓருடல் தன்னில்
இருந்திட வழியுண்டோ
ஒரு முகத்துக்கு
இரண்டு விழிகளை
வைத்த இயற்கையில் தவறுண்டோ
இந்த கேள்விக்கு பதிலேது
சிலர் வாழ்வுக்கு பொருளேது
அது உறவின் மாறாட்டம்
இது உரிமைப் போராட்டம்

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் 
பூவிழிக்கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே
அவன் ஒருவனுக்காக

No comments:

Post a Comment