ராம நாமம் ஒரு வேதமே - Rama Naamam Oru Vedame Lyrics

ம்.. பாடு..
ச...
சரிகமபா...சரிகமபா...
பதமபா.. பதமபா...
பதமபதநிசா.. பதமபதநிசா.. 
ஆஹா....
சநிதபமகரிசா.. 

ராம நாமம் ஒரு வேதமே
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்

அருள்மிகு
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

அவன் தான் நாரணன் அவதாரம்.. 
ஓ.. ஓ. ஆ...ஆ..
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன் தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான்
கௌதமன் நாயகி சாபம் தீர்த்தான்
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே


ஆ.. ஆ...ஆ...
ஓர் நவமி அதில்
நிலமெலாம் துலர
நினைவெலாம் மலரவே
உலகு புகழ் தாய் 
மடியில் ஒரு
மழலையாய் உதிக்க
மறையெலாம் துதிக்கவே
தயரதனின் வம்சத்தில்
பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகன் மகள்
வைதேகி பூச்சுட
வைபோகம் கொண்டாட
திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும்
மறவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை
துறந்தவனாம்
இனியவள் உடன்வர
இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிட
துணிந்தவனாம்
ஸ்ரீராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும்
நெஞ்சே மனம் இனிக்க
தினம் இசைக்க
குலம் செழிக்கும்
நிதம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனை பூமாலை
இதை விட ஆனந்தம்
வாழ்வில் ஏது
இசைத்தேன் நாமமே
நாளும் ஓது

ராம நாமம் ஒரு வேதமே
சநிதமப
ராம நாமம் ஒரு வேதமே
சபமகரி சநிதபம சரிகமத
ராம நாமம் ஒரு வேதமே
பதபாபபா நிதபாபபா சநிதபாபபா
கமதபாச கமபதநிசா 
சாச சாிசா நிசரிசநி
சசரிரி சசகரி சநிசரி சநிதா

சரிகம பமகரி ரிகமப பமகரிக
சகரிநி தநிதநி ததமம கரிசநி
சரிசக சமசம தசசநி தசசரி
சரிகமப கபமகரி சநிதமப

ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள்மிகு
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

No comments:

Post a Comment