போ நீ போ போ நீ போ - Po nee po po nee po tamil song lyrics

போ நீ போ..
போ நீ போ..
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் 
அன்பே போ

இனி வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட 
விதி செய்த அன்பே போ

ஓ..ஓ...ஓ..ஓ...ஓ..ஓ..

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ



ஓ.. உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் 
வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழியில்லையா
இருளிலே தேடிய
தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதியில்லையா

ஓ..ஓ...ஓ..ஓ...ஓ..ஓ..

போடி போ..
போடி போ..



என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ

நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் 
அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட 
விதி செய்த அன்பே போ 

ஓ..ஓ...ஓ..ஓ...ஓ..ஓ..

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

புது ரூட்டுல தான் ஹொய்யா - Puthu Rootula Than Hoyya Lyrics

ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா புது ரூட்டுல தான் ஹொய்யா 
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா 

ஹொய்யா இந்த ராத்திரியில் ஹொய்யா 
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஹொய்யா ஹொய்யா 

நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாம் என்றாலும்
அது வட்டம் இடாதா.. ஹோய்

ஹொய்யா புது ரூட்டுல தான் ஹொய்யா 
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா 

ஹொய்யா இந்த ராத்திரியில் ஹொய்யா 
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஹொய்யா ஹொய்யா 



பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான்
ஹொய்யா 
ராத்திரியில் பார்த்ததும் உண்டோ
ஹொய்யா ஹொய்யா 
காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
ஹொய்யா 
பாட்டிசைக்க கேட்டது உண்டோ
ஹொய்யா ஹொய்யா 
நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது
நீ இன்று நடக்கும் தடம் வேறு
நானன்றி உனக்கு துணையேது
நீ தடுத்தாலும் ஹொய்யா 
கால் தடுத்தாலும் ஹொய்யா
நாள் முழுக்க நான் வருவேன் மானே.. ஹோய்

ஹொய்யா புது ரூட்டுல தான் ஹொய்யா 
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா 

ஓ.. மண் குடிசை வாசலிலே
சந்திரன் தான் விடி விளக்கு
என் மடி தான் பஞ்சு மெத்தை
கண்மணியே நீ உறங்கு



வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
ஹொய்யா 
நானும் வந்தால் என்னடி அம்மா
ஹொய்யா ஹொய்யா 
தென்மதுரை சேரும் வரை ஆண் துணையாக
ஹொய்யா 
ஏழை என்னை ஏற்றுக் கொள்ளம்மா
ஹொய்யா ஹொய்யா 

ஓடாதே கிளியே தனியாக
ஏதேனும் நடக்கும் தவறாக
ஊர் கெட்டுக் கிடக்கு பொதுவாக
ஒன்றாக நடப்போம் மெதுவாக
காலடி நோக ஹொய்யா
நாலடி போக ஹொய்யா
பாதையிலே பூ விரிப்பேன் நானே.. ஹோய்

ஹொய்யா புது ரூட்டுல தான் ஹொய்யா 
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா 

ஹொய்யா இந்த ராத்திரியில் ஹொய்யா 
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஹொய்யா ஹொய்யா 

நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாம் என்றாலும்
அது வட்டம் இடாதா.. ஹோய்

ஹொய்யா புது ரூட்டுல தான் ஹொய்யா 
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா 

ஹொய்யா இந்த ராத்திரியில் ஹொய்யா 
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஹொய்யா ஹொய்யா 

மயக்கமா கலக்கமா மைண்டு - Mayakkamaa Kalakkamaa Mind full ah Lyrics - Thiruchitrambalam Lyrics

மயக்கமா கலக்கமா
மைண்டு ஃபுல்லா குழப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா
ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு
என்ன சங்கதி புரியலயே
இப்போ என் கதி தெரியிலயே

மயக்கமா கலக்கமா
மைண்டு ஃபுல்லா குழப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா



வேரா என் லைஃப்பில் நீதான்
பேரா எந்நாளும் பாக்கல நான் தான்
எனக்கு நீதானா பெஸ்டு
கடவுள் வச்சானே டெஸ்டு டெஸ்டு
பாசம் வச்சேன் ஓவரா
இது தான் லவ் ஃபீவரா
நான் என்ன பண்ணுவேன்
நீயே சொல்லு ஈஸ்வரா
என் நெஞ்சில் பூந்துகிட்ட
இப்ப நான் மாட்டிக்கிட்டேன்

தேன்மொழி பூங்கொடி
மைண்டு ஃபுல்லா நீயடி
வான்மதி பைங்கிளி
தோழி இப்போ காதலி.. ஏ..

தேன்மொழி பூங்கொடி வாடிப்போச்சே - Thenmozhi Poongodi Vaadipoche Lyrics

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறேனே
அழுது முடிச்சுட்டு சிரிக்கிறேனே

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ...



நெஜமா நான் செஞ்ச பாவம்
முழுசா உன் மேல விதைச்ச பாசம்
நிழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
பாலே இங்க தேறல
பாயாசம் கேட்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேட்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒன்னும் நானும் இல்ல

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ..

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறேனே
அழுது முடிச்சுட்டு சிரிக்கிறேனே

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ..

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ - Aaraariro Paadiyathaaro Thoongiponathaaro Lyrics

ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாள் ஆகுமா
ஆராரிரோ பாடியதாரோ யாரோ



நீ முந்திப் போனது 
நியாயம் இல்லையே
நான் முந்திப் போகவே 
யோகம் இல்லையே
கூட்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த 
குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ



பொழுதாகிப் போனதே
இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது
தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பாலூட்டிப் பார்த்தியே பாலூத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு 
அரிசி போட வந்தேன்
என்ன நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாள் ஆகுமா
ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ

பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் - Pattu Vanna Rosaavaam Paartha Kannu Moodaathaam Lyrics

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
அடி சத்தியமா
அடி சத்தியமா நான் இருப்பேன் உன்னாலே
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
உன்ன காத்திருப்பேன்
உன்ன காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்
இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே - Poonguyil Raagame Puthu Malar Vaasame Lyrics

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என்னுயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி



ஜென்ம ஜென்மங்கள்
ஒன்றாக நாம் சேரணும்
கண்ணே நான் காணும்
ஆகாயம் நீயாகணும்
என்றும் ஓயாது ஓயாது
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே
என் சூர்யோதயம்
அன்பே நீயில்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சம் உன் ஆலயம்
நீ என் உயிரோவியம்
சொர்க்கமே வா செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்



இன்று என் பாதை
உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில்
என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக 
நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி
இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம்
யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என்னுயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

சலங்கையிட்டால் ஒரு மாது - Salangayittaal Oru Maathu Lyrics

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

தக்கத்தகதிமி தக்கத்தகதிமி
தக்கத்தகதிமிதோம்.....



தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப்பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும்
நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர் விட்டு
பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு



சந்தன கிண்ணத்தில்
குங்கும சங்கமம் 
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட 
வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் 
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

வைகைக் கரைக் காத்தே நில்லு - Vaigai Karai Kaathe Nillu Lyrics

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு



திருக்கோவில் வாசலது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜையது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணீர் விடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும் 
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும் 
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்

காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு



மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடை ஒளி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ 
சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ 
சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ

காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு - Thendral Kaatre Konjam Nillu Lyrics

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு



மேடை ஏறக்கூடுமோ
மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால்
யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது
காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது
காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு



ஜீவன் ரெண்டும் சேர்ந்தது
தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் 
கவிதை போல சாஸ்வதம்
இன்று வந்த நேசமோ
பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும்
வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத் தான் கண்ணே

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு

தென்றல் காத்தே தென்றல் காத்தே - Thendral Kaathe Thendra Kaathe Lyrics

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்த பாத்துதான்
வந்து சேரச் சொல்ல மாட்டியா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா



முத்துமேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் ஆளும் யோகம் தான்
தொட்டு பாக்கவும்  கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்
நீயும் நானும் பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒன்னா கூடணும்
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒன்னா வாழணும்

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா



இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாறக் கூடுமோ
காத்து வாழும் காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்த பாத்துதான்
மணமாலை வந்து போடவா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா - Ore Oru Oorukulle Ore Oru Amma Appa Lyrics

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தாறேன்னாங்க
சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பாரி ஆட்டி

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா



பள்ளிக்கூடம் நான் போகையில
பம்பரமா தெனம் ஓடுவேன்டா
வாத்தியார நான் பாக்கையில
வணக்கம் சொல்லி நல்லா பாடுவேன்டா
அந்தக் கால படிப்ப எல்லாம்
படிக்க தான்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரிட்சையில தோத்தேன்
அந்தக் கால படிப்ப எல்லாம்
படிக்க தான்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரிட்சையில தோத்தேன்
நான் படிக்க நெனச்சதெல்லாம்
நீ படிக்கோனும்
என்னுடைய கவலை எல்லாம்
நீங்க போக்கோனும்

உங்கள பெத்ததே சந்தோஷம்
நான் உங்கள பெத்ததே சந்தோஷம்
சிங்கத்த பெத்ததே சந்தோஷம்
ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோஷம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா



தோளு மேல என்ன தூக்கி கிட்டு
ஊர்வலமா எங்கய்யா போவாரய்யா
எண்ணத் தேச்சி என்ன குளிக்க வைக்க
ஒரு நாட்டியமே எங்கம்மா ஆடுமப்பா
செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
ஒலகத்த நான் புரிஞ்சிக்கிட
வழியும் தெரியவில்ல
செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
ஒலகத்த நான் புரிஞ்சிக்கிட
வழியும் தெரியவில்ல
பெத்தவங்க போனபின் தான்
வாழ்க்க புரிஞ்சிச்சு
உங்க அம்மா வந்த பின் தான்
பொறுப்பு வந்துச்சு

உங்கள பெத்ததே சந்தோஷம்
நான் உங்கள பெத்ததே சந்தோஷம்
மக்கள பெத்ததே சந்தோஷம்
என் மக்கள பெத்ததே சந்தோஷம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தாறேன்னாங்க
சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பாரி ஆட்டி

கருவாப் பையா கருவாப் பையா - Karuvaa Payyaa Karuvaa Payyaa Lyrics

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
கருவாச்சி கவுந்துபுட்டா
மனசாட்ச தொலைச்சுப் புட்டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
ஆ.. குண்டூசி மீசைக் குத்தி
மேலுதடு காயமாச்சு
கிறுக்குப் பய பல்லு பட்டு
கீழுதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பலத்தில்
உசுர வச்சு விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டு புடிக்கணும் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா



வீச்சருவா புடிக்கிற வித்தை தெரிஞ்சவன்
புத்தகத்த சுமக்கிற பூவ ரசிக்கிறேன்
ஆத்திச்சூடி பாடத்த நித்தம் சொன்னவ
வள்ளுவனின் மூன்றாம் பால் தேடி படிக்கிறேன்
ஏ.. சோளக்காட்டு பொம்மையப் போல்
ஒத்தையிலே நின்னேனே
சோடி வரம் கேட்டு உந்தன் 
துணைக்கு நானும் வந்தேனே
ஆ.. ஒடுக்கப்பட்ட கல்லு இவ
மூலக்கல்லா ஆகிடத்தான் 
காதல் என்னும் உளி வச்சு ஒடச்சேன்

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா



கட்டப்புலி மாடனுக்கு பொங்க வச்சுத்தான்
கட்டபொம்மன் உன்னோட கைய புடிக்கிறேன்
தேவதைய சேரத்தான் தெற்கே உதிச்சவன்
தேனெடுக்கும் நெனப்புல ஓடா இளைக்கிறேன்
ஏ.. கொப்பர தேங்காப் பூவ உனக்கு தந்தேனே
திருவலா மாறி உன்ன திருவிப்புட்டேனே
ஆ.. சின்னப் புள்ள ராசாத்தி
செம்புலிங்கத்த நேர்ந்துகிட்டேன்
ரெட்டப்புள்ள பெத்துக் கொடுக்கிறேன் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
ஏ..கருவாச்ச கவுத்துப் புட்டேன்
மனசாட்ச புடிச்சிப் புட்டேன்

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
குண்டூசி மீசைக் குத்தி
மேலுதடு காயமாச்சு
கிறுக்குப் பய பல்லு பட்டு
கீழுதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பலத்தில்
உசுர வச்சு விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டு புடிக்கணும் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே - Kaathal Vaibogame Kaanum Nannaalithe Lyrics

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே



கோடைக் காலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்து கூடல்
விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடை அமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே



எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது பாவம் தாபம்
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
அனுபோகம் யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து - Poonthenil Kalanthu Pon Vandu Elunthu Lyrics

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

ஏறாத ஏணிதனில் ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்த காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும்
மீனாக ஜொலிப்பாள்
கலை வண்ணத்தாரகை என வருவாள்
அது நடக்கும் என நினைக்கும்
மனம் நாள் பார்த்து தொடங்கி விடும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன



கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ணத் தோகை அவள்
சங்கீத ஞானம் உண்டு பாடல் நடத்த
வானம்பாடி அவள்
அவள் பூவிழிச் சிரிப்பினில்
பூலோகம் மயங்கும்
பொல்லாத புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும் பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன



என்னை தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கமில்லை
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்
மறு விளக்கமில்லை
அவள் தான் கொண்ட புகழ் 
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

கண்ணா என் சேலக்குள்ள கட்டெறும்பு - Kannaa En Selaikulla Katterumbu Lyrics

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
எறும்பு செய்யும் லீலை போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்.. அதுக்கு



அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
ஆஹா.. ஆஹஆஹா.. 
ஏஹே.. 
கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்.. தொட எண்ணம் ரோசா
ஆஹா.. ஆஹஆஹா.. 
ஆஹா..
இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
வா வா ஆ... வா வா...
வா வா ஆ... வா வா...

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு



பூமிக்குள்ள பொன்ன வச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வச்சான்
ம்ஹும்.. ஆஹஆஹா.. 
ஓஹோ..
ஆம்பளைக்கு மீசை வச்சான்
பொம்பளைக்கு என்ன வச்சான்
ம்ஹும்.. ம்ஹும் ம்ஹும்.. 
லலா...
அதை தெரிஞ்சி விளக்கம் தாறேன்
உன்ன திருடி குடிக்கப் போறேன்
வா வா ஆ... வா வா...
வா வா ஆ... வா வா...

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
எறும்பு செய்யும் லீலை போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ம்ம்

உயிரே வா உறவே வா அழிவதில்லை - Uyire Vaa Urave Vaa Alivathillai Lyrics

உயிரே வா உறவே வா
உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல் 
அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீ தான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா

உயிரே வா உறவே வா



சிலருக்கு தேவை தேகம் தான்
அவரது உணர்வோ காமம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
போனால் இதயம் திரும்பாது
வேறொரு இதயம் பொருந்தாது
ஒரு முறை தான் நினைத்துவிட்டால்
மறப்பது என்பது முடியாது

உயிரே வா உறவே வா



சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள்
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
கடல் மேல் முத்து மிதப்பதில்லை
உண்மை காதல் சுலபமாய் கிடைப்பதில்லை
பெண் மனதை ஆழம் என்பேன்
காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்கள் என்பேன்

உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல் 
அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீ தான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா

உயிரே வா உறவே வா

ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க - Raathiriyil Paadum Paatu Kekka Lyrics

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு

ஏ... ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு



கள்ளழகர் வைகை ஆத்தில்
கால வைக்கும் நல்ல நாளில்
எட்டு பட்டி ஊரு சனம்
கட்டுச் சோறு கட்டி வரும்
சொக்கனுக்கு மீனாள் போலே
பக்கத் துணை வாச்ச தாலே
சின்னஞ்சிறு சோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்
உன் மேல தான் ஆச வச்சேன்
வேறெதுக்கு மீச வச்சேன்
என் புருஷன் நீயாகத்தான்
போன சென்மம் பூச வச்சேன்
உன்னோடு தான் நான் கூட
என்னோடு தான் நீ கூட
போடு முந்தானை

ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு



எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களத்தான் கட்டி வச்சான்
பொஞ்சாதியோ பூந்தோரணம்
நானும் ரொம்ப சாதாரணம்
வெண்ணிலவ மேகம் போல
என்ன அவ மூடி வப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான் தவிப்பா
ஊருக்கவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லப்போனா என்னப்போல
பாக்கியவான் யாருமில்ல
தாரங்கூட தாயப்போல
ஈடு சொல்ல யாருமில்ல
எல்லாம் என் யோகம்

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு

ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை - Aaraaro Paatu Paada Naanum Thaayillai Lyrics

ஆராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை



மார்பிலே போட்டு நான்
பாட வழி தான் இல்லையே
மடியிலே போட்டு தான்
பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே
வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே
நம்பக் கூடாது
மேலாடை பார்த்து தான்
நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே
ஆசை வேர் விடுதே

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை



தோளிலே நாளெல்லாம்
சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம்
மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே.. ம்...
இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே.. ம்ஹூம்..
என்றும் மாறாது
நீ என்றும் தேன் என்றும்
பேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும்
காதல் பூ மழையே

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - Kannane Nee Vara Kaathirunden Lyrics

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கண்ணிமையில்
உன்னருகே... ஏ...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்



நீலம் பூத்த ஜாலப் பார்வை
மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல்
நீயா நானா
நீலம் பூத்த ஜாலப் பார்வை
மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல்
நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாளிது நாளிது
பொன்னென மேனியும்
மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை
பின்னிட பின்னிட
வாடையில் வாடிய
ஆடையை மூடிய
தேன்.. நான்...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன்னழகே பூவழகே
என்னருகே... ஏ...
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்



ஆசை தீரப் பேச வேண்டும்
வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா
ஆசை தீரப் பேச வேண்டும்
வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா
பெண் மயங்கும் 
நீ தொட நீ தொட
கண் மயங்கும் 
நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்
பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்
தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்.. நீ.. 

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கண்ணிமையில்
உன்னருகே... ஏ...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

கேளடி கண்மணி பாடகன் சங்கதி - Keladi Kanmani Paadagan Sangathi Lyrics

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆ..ஆ..ஆ..ஆ..
நாள் முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி



எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே
நான் இசைத்தேன் அம்மா
எனக்காக நான் பாடும்
முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை
மணம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக
மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி



நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா
நான் வாழும் நேரம்
உன் மார்போடு தான்
நீ என்னை தாலாட்டும்
தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள்
நான் போன போது
கை சேர்த்து நீ தானே
மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆ..ஆ..ஆ..ஆ..
நாள் முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி - Kuyila Pudichi Koondil Adaichi Lyrics

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்



ஆண் பிள்ள முடி போடும்
பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு 
அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே
நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோவம்
ஓலக் குடிசையில 
இந்த ஏழை பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இத யாரோடு சொல்ல

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்



எல்லார்க்கும் தல மேல
எழுத்தொன்னு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீர குடம் கொண்டு
வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாம வாழும்
யாரார்க்கு எதுவென்று
விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும்
அது தான்
ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி
கோழை என்று இருந்தேன்
போனது கை நழுவி
இத யாரோடு சொல்ல

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி - Kannadaasan Kaarakudi Perasolli Oothikudi Lyrics

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில
கண்ணமூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷ்யலிசம் தான்

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா

ஆ...ஆ.. ஆ...ஆ..



பொண்டாட்டி புள்ளைங்க
தொல்லைங்க இல்லா இடம்
இந்த இடம் தானே
இந்த இடம் இல்லை இன்னா
சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
ஓ..ஓ..ஓ..ஓ..
சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே
இயக்குநர் ஆரு அங்க பாரு பொலம்புறாரு
நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே
நூற தாண்டுனா நடக்க பாதையில்லையே

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா

ஆ...ஆ.. ஆ...ஆ..



அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஓவரா ஆச்சுதுன்னா வெட்டு குத்து தானே
ஓ..ஓ..ஓ..ஓ..
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்களுக்குள் ஜாதி மதம் ரெண்டுமில்ல
கட்சிகாரன் மச்சி என்ன ஆச்சு
வேட்டி அவுந்து போச்சு
ரோட்டு கடையில மனுஷன் ஜாலிய பாரு
சேட்டு கடையில மனைவி தாலிய பாரு

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில
கண்ணமூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷ்யலிசம் தான்

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா

ஓ..ஓ..ஓ...ஓ..

கொத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி - Kothaalsavadi Lady Nee Koyambedu Vaadi Lyrics

கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
எக்கோ எக்கோ எக்கோ...
எக்கோ எக்கோ எக்கோ...
கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா.. வேணாமே.. 
மூக்கு போல நூக்கல் வேணுமா.. வேணாமே.. 
பெங்களூரு கத்திரி வேணுமா.. வேணாமே..
திண்டுக்கல்லு திராட்சை வேணுமா..வேணாம்..
நீ பச்சமிளகா கடிக்கும்போது
கண்ணு ரெண்டும் கலங்குதடி

கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி



பட்டினம்பாக்கம் ரூட்டுல
45 பஸ்ஸூல பரிமளாவ 
புருஷன் கூட பாத்தேன்டா
சுங்கிடி சேல மடிப்புல
கொத்து சாவி இடுப்புல ஊர்மிளாவ 
உரசி கொஞ்சம் பாத்தேன்டா
வாடியக்கா தலுக்கா 
மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா 
மலுக்கா ஒடியிற
வாடியக்கா தலுக்கா 
மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா 
மலுக்கா ஒடியிற
காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ
அத வலிச்சு பாத்த பசங்களெல்லாம்
ரொம்ப கேடிங்கோ
காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ
அத வலிச்சு பாத்த பசங்களெல்லாம்
ரொம்ப கேடிங்கோ



சிட்லபாக்கம் நைட்டுல
சிங்கிளு டீயி கடையில
சந்திரிகாவ சிலுமிசமா பாத்தேன்டா
பீச்சில் வச்சு பேசிப்போம்
பின்னால தானே யோசிப்போம்
வழக்கமாக நடக்குதிந்த காதல் தான்
ஜோடி போட்டு ஆயிஷா
நைசா நடக்குறா
மோடி வச்சு புடிக்க 
நெனச்சா நலுவுறா
ஜோடி போட்டு ஆயிஷா
நைசா நடக்குறா
மோடி வச்சு புடிக்க 
நெனச்சா நலுவுறா
ஜாம் பஜார் பர்மா பஜார் சிரிப்புகாரிங்கோ
அவ லவுசு காட்டும் பசங்களெல்லாம்
இப்போ காலிங்கோ
ஜாம் பஜார் பர்மா பஜார் சிரிப்புகாரிங்கோ
அவ லவுசு காட்டும் பசங்களெல்லாம்
இப்போ காலிங்கோ

கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா.. வேணாமே.. 
மூக்கு போல நூக்கல் வேணுமா.. வேணாமே.. 
பெங்களூரு கத்திரி வேணுமா.. வேணாமே.. 
திண்டுக்கல்லு திராட்சை வேணுமா..வேணாம்..
நீ பச்சமிளகா கடிக்கும்போது
கண்ணு ரெண்டும் கலங்குதடி

எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டா கேக்கும் - Ettanaa Iruntha Ettooru Empaatta kekukkum Lyrics

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்



கால் வயித்து கஞ்சிக்காக
கடலக் கூடத் தாண்டுவேன்.. ஓ..ஓ...
வானவில்ல வாங்க பேரம்
கடவுளோட பேசுவேன்.. ஓ..ஓ...
இந்திரனும் கூட என்னோட ஃப்ரண்டு
என்று சொல்ல என்னத் தவிர யாருடா
அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட 
வந்து எனக்கு கால அமுக்கும் பேருடா
சின்ன ராசு பொன்னு ராசு
காத்து நம்ம பக்கம் வீசுனா
முட்டகோசு முட்டகோசு
என்றும் வாழ்க்கையில பாசுடா
நல்லா பூந்து விளையாடுடா

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்

எதுவரை போகலாம் என்று நீ - Ethu Varai Pogalaam Endru Nee Lyrics

எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்று தான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆணென்றால் நான் தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே.. ஓ..ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி



என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை 
கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி 
கொய்யச்சென்றேன்
புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்
பெறும் காசோலைகள் பொன் மாலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன்
உயிரே...

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
உனை பார்க்காத நாள் பேசாத நாள்
என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்
தினம் நீ வந்ததால் தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண் பால்
உயிரே...



எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்று தான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி 
தூய்மையை
என் கண் பார்த்து பேசும் 
பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே.. ஓ..ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா - Enna Oru Enna Oru Alagiyadaa Lyrics

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா

மனச தாக்குற 
மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் 
ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற 
தாமரை அவ தான்
கதையில கேக்குற 
தேவதை அவ தான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்க போறா எங்க போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒருமுறை திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒன்னாக்க தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா



ராகுகாலத்துல நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
புள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒன்னு உடைக்க 
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல இழைச்சு 
வாழவைப்பேன் மாசா
அவளை பார்க்குற யாருமே
அவளை மறந்தும் கூட
மறப்பதும் சிரமம்
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா.. 
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..



ஓ.. தில்லை நகரா.. தேரடித் தெருவா..
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டு 
சேல வாங்கித் தருவேன்
வெட்கப்பட்டு எனை தேடு
ஹே.. தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல நாம
ரெண்டு பேருக்கிடையில் 
நடுவில் எதுக்கடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிகை வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி

என்ன ஒரு.. அழகியடா
கண்ணவிட்டு..விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட
பழகலடா..
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா.. 
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..